sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பட்டப்பகலில் வங்கியில் ரூ.15 லட்சம் கொள்ளை

/

பட்டப்பகலில் வங்கியில் ரூ.15 லட்சம் கொள்ளை

பட்டப்பகலில் வங்கியில் ரூ.15 லட்சம் கொள்ளை

பட்டப்பகலில் வங்கியில் ரூ.15 லட்சம் கொள்ளை


ADDED : பிப் 14, 2025 11:40 PM

Google News

ADDED : பிப் 14, 2025 11:40 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சூர்: கேரளாவில் திருச்சூர் மாவட்டத்தின் சாலக்குடி அருகே உள்ள போட்டா பகுதியில், பெடரல் வங்கி இயங்கி வருகிறது. இங்கு, ஹெல்மெட் அணிந்தபடி மர்ம நபர் ஒருவர் நேற்று மதியம் உள்ளே நுழைந்தார்.

அங்குள்ள காசாளர் அறைக்கு சென்ற அந்த நபர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி ஊழியர்களை மிரட்டினார்.

அதன்பின், காசாளர் அறையின் கண்ணாடியை உடைத்து, அங்கு வைத்திருந்த 15 லட்சம் ரூபாயை அவரது பைக்குள் எடுத்து போட்டு கொண்டு, கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பிச்சென்றார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், வங்கி ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். இதையடுத்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களையும் ஆய்வு செய்தனர்.

தப்பியோடிய மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us