sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 10, 2026 ,மார்கழி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ரூ.98 கோடி பீர் பாட்டில்கள் பறிமுதல்

/

ரூ.98 கோடி பீர் பாட்டில்கள் பறிமுதல்

ரூ.98 கோடி பீர் பாட்டில்கள் பறிமுதல்

ரூ.98 கோடி பீர் பாட்டில்கள் பறிமுதல்


ADDED : ஏப் 04, 2024 10:32 PM

Google News

ADDED : ஏப் 04, 2024 10:32 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மைசூரு : மைசூரு நகரின், தான்ட்யா தொழிற் பகுதியில் யுனைடெட் புருவரீஸ் லிமிடெட் தொழிற்சாலை உள்ளது. வரி ஏய்ப்பு செய்யும் நோக்கில், இங்கு பெருமளவில் மதுபானம் பதுக்கி வைத்துள்ளதாக, கலால் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதேபோல, மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கும், தொலைபேசியில் தகவல் கூறப்பட்டது.

எனவே, நேற்று காலை, கலால் துறை அதிகாரிகள், தேர்தல் அதிகாரிகள் தொழிற்சாலைக்கு சென்று சோதனை நடத்தினர். வெவ்வேறு கம்பெனிகளின் பீர் பாட்டில்கள் பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

பீர் பாட்டில்களை கலால் துறை அதிகாரிகள், பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு 98.55 கோடி ரூபாயாகும். மதுபானம் தயாரிக்கும் கச்சா பொருட்களையும் கைப்பற்றினர். இது தொடர்பாக, 17 பேர் மீது வழக்கு பதிவாகியுள்ளது.

தேர்தலுக்கு வாக்காளர்களுக்கு வினியோகிக்கும் நோக்கில், இவற்றை பதுக்கி வைத்திருக்கலாம் என, தேர்தல் அதிகாரிகள் கருதுகின்றனர்.






      Dinamalar
      Follow us