sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஹிந்துத்வா குறித்து ராகுல் பேச்சு பெஜாவர் மடாதிபதி கண்டனம்

/

ஹிந்துத்வா குறித்து ராகுல் பேச்சு பெஜாவர் மடாதிபதி கண்டனம்

ஹிந்துத்வா குறித்து ராகுல் பேச்சு பெஜாவர் மடாதிபதி கண்டனம்

ஹிந்துத்வா குறித்து ராகுல் பேச்சு பெஜாவர் மடாதிபதி கண்டனம்

1


ADDED : ஜூலை 11, 2024 06:35 AM

Google News

ADDED : ஜூலை 11, 2024 06:35 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாவணகெரே : ''ஹிந்துத்வா குறித்து, லோக்சபாவில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் பேசியதை, நான் கண்டிக்கிறேன். ஹிந்துக்கள் வன்முறையாளர்கள் என, கூறியது சரியல்ல,'' என, உடுப்பியின் பெஜாவர் மடத்தின் மடாதிபதி விஸ்வ பிரசன்ன தீர்த்த சுவாமிகள் தெரிவித்தார்.

தாவணகெரேவில் நேற்று அவர் அளித்த பேட்டி:

சுவாமிகள் அரசியல் பேசக்கூடாது என்பது சரியல்ல. மடாதிபதிகளும் கூட ஓட்டுப் போடுகின்றனர். என்னை பொறுத்தவரை அவர்கள் அரசியல் பேசுவது தவறு அல்ல.

ஹிந்துத்வா குறித்து, லோக்சபாவில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் பேசியதை நான் கண்டிக்கிறேன். 'ஹிந்துக்கள் பகைமை கொள்வர், வன்முறையாளர்கள்' என, கூறியுள்ளார். அப்படி என்றால் நமக்கு நீதிமன்றங்கள் தேவையில்லையா? பொறுப்பான பதவியில் இருப்பவர், இது போன்று பேசக்கூடாது. இது உணர்வுகளை துாண்டும் பேச்சாகும்.

வேறு யாராவது பேசியிருந்தால், நடவடிக்கை எடுத்திருப்பர். ஆனால் ராகுல் பேசியதால், நடவடிக்கை எடுக்கவில்லை. இரண்டு சமுதாயங்களுக்கு இடையே, விஷ விதையை விதைக்கக் கூடாது. மணிப்பூரில் நடந்த சம்பவத்தை யாராலும் மறக்க முடியாது.

இவ்வாறு அவர்கூறினார்.






      Dinamalar
      Follow us