sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பெங்., மாநகராட்சி நிர்வாக அதிகாரியாக உமாசங்கர்

/

பெங்., மாநகராட்சி நிர்வாக அதிகாரியாக உமாசங்கர்

பெங்., மாநகராட்சி நிர்வாக அதிகாரியாக உமாசங்கர்

பெங்., மாநகராட்சி நிர்வாக அதிகாரியாக உமாசங்கர்


ADDED : ஜூன் 12, 2024 11:10 PM

Google News

ADDED : ஜூன் 12, 2024 11:10 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: பெங்களூரு மாநகராட்சி நிர்வாக அதிகாரியாக, மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி உமாசங்கர் நியமிக்கப்பட்டார்.

பெங்களூரு மாநகராட்சிக்கு, 2020ல் இருந்து தேர்தல் நடத்தப்படவில்லை. இதனால் நிர்வாகத்தை கவனிப்பதற்காக, அரசு தரப்பில் மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி கவுரவ் குப்தா, 2020 செப்டம்பர் 11ம் தேதி நியமிக்கப்பட்டார்.

பின், நகர வளர்ச்சி துறை கூடுதல் தலைமை செயலராக பொறுப்பேற்ற ராகேஷ்சிங், 2021 ஏப்ரல் 1ம் தேதி முதல், நிர்வாக அதிகாரியாக பதவி வகித்து வந்தார்.

இவர், கடந்த மே 31ம் தேதி, பணியில் இருந்து ஓய்வு பெற்றார். அடுத்து யாரை நியமிக்கலாம் என்று முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் ஆகியோர் சமீபத்தில் ஆலோசனை நடத்தினர்.

அதன்படி, தற்போது நகர வளர்ச்சி துறை கூடுதல் தலைமை செயலராக இருக்கும் உமாசங்கர், பெங்., மாநகராட்சி நிர்வாக அதிகாரியாக நேற்று நியமிக்கப்பட்டார். இவர், 1993 பேட்ச் ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஆவார். பல்வேறு உயர் பதவிகளை வகித்துள்ளார்.

நியமன அறிவிப்பு வெளியான உடனே, மாநகராட்சி தலைமை அலுவலகத்துக்கு சென்று, பொறுப்பேற்று கொண்டார்.

தலைமை கமிஷனர் துஷார்கிரிநாத் உட்பட அனைத்து மண்டல கமிஷனர்களும் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us