sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

நிரூபித்தால் ராஜினாமா பைரதி சுரேஷ் சவால்

/

நிரூபித்தால் ராஜினாமா பைரதி சுரேஷ் சவால்

நிரூபித்தால் ராஜினாமா பைரதி சுரேஷ் சவால்

நிரூபித்தால் ராஜினாமா பைரதி சுரேஷ் சவால்


ADDED : ஜூலை 13, 2024 05:19 AM

Google News

ADDED : ஜூலை 13, 2024 05:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு : ''மூடா தொடர்பான ஆவணங்களை, நான் கொண்டு வந்ததை நிரூபித்தால், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறேன்,'' என, நகர வளர்ச்சி துறை அமைச்சர் பைரதி சுரேஷ் சவால் விடுத்தார்.

பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:

'மூடா' தொடர்பான ஆவணங்களை, சிறப்பு விமானம், ஹெலிகாப்டரில் நான் கொண்டு வந்ததாக, பா.ஜ.,வினர் குற்றஞ்சாட்டுகின்றனர். நான் ஆவணங்களை கொண்டு வந்ததை நிரூபித்தால், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறேன்.

மூடாவின் ஆவணங்களை, யாராவது கொண்டு வர முடியுமா? 20 ஆண்டுகளாக தவறுகள் நடந்துள்ளன. 2005 வரையிலான அனைத்து விஷயங்கள் குறித்தும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளோம். தேவையின்றி, சித்தராமையா முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய முடியுமா?

ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளிடம் விசாரணையை ஒப்படைக்காமல், பா.ஜ.,வினரிடம் ஒப்படைக்க வேண்டுமா? இரண்டு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர். முறைகேட்டை மூடி மறைக்கவில்லை. அரசு தவறு செய்த யாரையும் விடாது. சிறிது நாட்கள் பொறுத்திருங்கள். அனைத்தும் வெளிச்சத்துக்கு வரும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us