ADDED : ஜூன் 29, 2024 12:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குருகிராம்,:குருகிராமில், உணவு வினியோக நிறுவன ஊழியரான வாலிபர் டிராக்டர் மோதி உயிரிழந்தார்.
உத்தர பிரதேச மாநிலம் மொராதாபாத் நகரைச் சேர்ந்தவர் தர்மவீர் சிங், 35. குருகிராம் நகரில் தங்கி, உணவு வினியோக நிறுவனமான ஜொமேட்டோவில் பணிபுரிந்தார்.
நேற்று அதிகாலை 2:30 மணிக்கு, குருகிராம் 40வது செக்டாரில் உள்ள வீட்டுக்குத் பைக்கில் சென்றார். ஜார்சா ராதா கிருஷ்ணா கோவில் அருகே, பின்னால் வந்த டிராக்டர் பைக் மீது மோதியது. துாக்கி வீசப்பட்ட சிங் பலத்த காயம் அடைந்தார்.
தகவல் அறிந்து வந்த போலீசார், சிங்கை மருத்துவமனைக்கு துாக்கிச் சென்றனர். பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதை உறுதி செய்தனர்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய டிராக்டர் டிரைவரை தேடுகின்றனர்.

