sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

'பிட்காயின்' முறைகேடு வழக்கு; காங்., தலைவரிடம் விசாரணை

/

'பிட்காயின்' முறைகேடு வழக்கு; காங்., தலைவரிடம் விசாரணை

'பிட்காயின்' முறைகேடு வழக்கு; காங்., தலைவரிடம் விசாரணை

'பிட்காயின்' முறைகேடு வழக்கு; காங்., தலைவரிடம் விசாரணை


ADDED : ஜூன் 12, 2024 11:27 PM

Google News

ADDED : ஜூன் 12, 2024 11:27 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: 'பிட் காயின்' வழக்கு தொடர்பாக, இளைஞர் காங்கிரஸ் தலைவர் முகமது நல்பாடிடம், சி.ஐ.டி., அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

சில ஆண்டுகளுக்கு முன், போதைப்பொருள் வழக்கு வெளிச்சத்துக்கு வந்தது. இந்த வழக்கில் பிரபல கன்னட நடிகர், நடிகைகள் கைதாகினர். இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இது குறித்து, ஆழமாக விசாரித்த போது, பிட் காயின் முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டது. இதை பற்றி விசாரணை நடத்த, மாநில அரசு எஸ்.ஐ.டி., அமைத்தது.

பிட் காயின் வழக்கில், ஹேக்கர் ஸ்ரீகிருஷ்ணா என்ற ஸ்ரீகி, ராபின் கன்டேவாலா, சுனிஷ் ஹெக்டே உட்பட பலர் கைதாகினர். வழக்கு தொடர்பாக, ஜூன் 6ல் ஏ.சி.எம்.எம்., நீதிமன்றத்தில் முதற்கட்ட குற்றபத்திரிக்கை தாக்கல் செய்தனர்.

இளைஞர் காங்கிரஸ் தலைவர் முகமது நல்பாட், பிட்காயின் வழக்கில் கைதான ஸ்ரீகிக்கு மிகவும் நெருக்கமானவர் என்பது, விசாரணையில் தெரிந்தது. பெங்களூரின், காட்டன்பேட்டில் நடந்த ஹேக்கிங் வழக்கில், இவருக்கு தொடர்பிருக்கலாம் என, சந்தேகிக்கப்படுகிறது. எனவே நேற்று மதியம், பெங்களூரின், சி.ஐ.டி., அலுவலகத்தில் முகமது நல்பாடிடம், எஸ்.ஐ.டி., அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.






      Dinamalar
      Follow us