ஊழலுக்கு எதிராக போராடும் பா.ஜ.,: ஆந்திராவில் அமித்ஷா பேச்சு
ஊழலுக்கு எதிராக போராடும் பா.ஜ.,: ஆந்திராவில் அமித்ஷா பேச்சு
ADDED : மே 05, 2024 01:55 PM

அமராவதி: 'ஆந்திராவில் ஊழல், குற்றம், மாபியா, மதமாற்றம் ஆகியவற்றுக்கு எதிராக பா.ஜ., ஜனசேனா, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் இணைந்து போராடுகின்றன' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
ஆந்திர பிரதேசம் தர்மவரத்தில் நடந்த தேர்தல் பேரணியில் அமித்ஷா பேசியதாவது: முதல் இரண்டு கட்ட லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவுக்குப் பிறகு, பிரதமர் மோடி சதம் அடித்துள்ளார். இன்று நான் உங்களுக்கு சொல்கிறேன். மூன்றாவது முறையாக மோடியை பிரதமராக்க நாடு முழுவதும் மக்கள் முடிவு செய்துள்ளனர். ஆந்திராவில் ஊழல் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். ராகுல் உட்பட இண்டியா கூட்டணி தலைவர்கள் யாரும் பிரதமராகத் தகுதியற்றவர்கள்.
ஊழல்
ஆந்திராவில் ஊழல், குற்றம், மாபியா, மதமாற்றம் ஆகியவற்றுக்கு எதிராக பா.ஜ., ஜனசேனா, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் இணைந்து போராடுகின்றன. ஆந்திராவின் அமராவதியை மீண்டும் தலைநகராக்க வேண்டும் என்பதற்காக, தெலுங்கு தேசம் மற்றும் ஜனசேனாவுடன் கூட்டணி அமைத்துள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.