sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

உ.பி.,யில் விஷ ஊசி செலுத்தி பா.ஜ., பிரமுகர் கொலை

/

உ.பி.,யில் விஷ ஊசி செலுத்தி பா.ஜ., பிரமுகர் கொலை

உ.பி.,யில் விஷ ஊசி செலுத்தி பா.ஜ., பிரமுகர் கொலை

உ.பி.,யில் விஷ ஊசி செலுத்தி பா.ஜ., பிரமுகர் கொலை


ADDED : மார் 11, 2025 11:59 PM

Google News

ADDED : மார் 11, 2025 11:59 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சம்பல்: உத்தர பிரதேசத்தின் சம்பல் மாவட்டம் ஜூனாவாய் பகுதியைச் சேர்ந்தவர் குல்பம் சிங் யாதவ், 60. பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவரான இவர், தேப்தாரா கிராமத்தில் உள்ள பண்ணை வீட்டில் நேற்று முன்தினம் தங்கி இருந்தார்.

அப்போது, அங்கு பைக்கில் வந்த அடையாளம் தெரியாத மூன்று பேர், குல்பம் சிங்கை வணங்கி இயல்பாக பேச துவங்கினர். குல்பம் சிங்கின் வயிற்றுப்பகுதியில் திடீரென ஊசியை செலுத்திவிட்டு, அவர்கள் தப்பியோடினர். இதைத்தொடர்ந்து, குல்பம் சிங்கிற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

அருகில் உள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். எனினும், குல்பம் சிங் உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து அவரது மகன் அளித்த புகாரின்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய மூன்று பேரை தேடி வருகின்றனர்.

இதற்கிடையே, குல்பம் சிங்கிற்கு செலுத்தப்பட்ட ஊசி விஷத்தன்மை உடையதா என்பதை கண்டறிய, ஆய்வக பரிசோதனைக்கு போலீசார் அனுப்பியுள்ளனர்.






      Dinamalar
      Follow us