sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

குண்டுவெடிப்பு வழக்கில் கைதானவருக்கு போலீஸ் இன்ஸ்பெக்டருடன் தொடர்பு 

/

குண்டுவெடிப்பு வழக்கில் கைதானவருக்கு போலீஸ் இன்ஸ்பெக்டருடன் தொடர்பு 

குண்டுவெடிப்பு வழக்கில் கைதானவருக்கு போலீஸ் இன்ஸ்பெக்டருடன் தொடர்பு 

குண்டுவெடிப்பு வழக்கில் கைதானவருக்கு போலீஸ் இன்ஸ்பெக்டருடன் தொடர்பு 


ADDED : மார் 31, 2024 11:03 PM

Google News

ADDED : மார் 31, 2024 11:03 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: 'ராமேஸ்வரம் கபே' ஹோட்டல் குண்டுவெடிப்பு வழக்கில் கைதானவருக்கு, போலீஸ் இன்ஸ்பெக்டருடன் தொடர்பு இருந்தது, தெரியவந்து உள்ளது.

பெங்களூரு 'ராமேஸ்வரம் கபே' ஹோட்டலில் கடந்த மாதம் 1 ம் தேதி, குண்டுவெடித்தது. ஊழியர்கள் உட்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த வழக்கை என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரிக்கின்றனர். ஷிவமொகாவின் முஸவீர் உசைன் ஷாகிப், அப்துல் மாத்ரின் தாஹா குண்டுவெடிப்பு நிகழ்த்தியது தெரிந்தது. இவர்களுக்கு உதவியாக இருந்த முஜாமில் ஷெரிப் என்பவர், கடந்த மாதம் 26 ம் தேதி கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் தட்சிண கன்னடா மாவட்டத்தில் பணியாற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவருடன், முஜாமிலுக்கு தொடர்பு இருந்தது, என்.ஐ.ஏ., விசாரணையில் தெரிந்து உள்ளது.

கடந்த ஆறு மாதமாக முஜாமிலும், அவரது தாயும் சிக்கமகளூரு டவுன் அய்யப்ப நகரில், வாடகை வீட்டில் வசித்து வந்தனர். இன்ஸ்பெக்டர் கூறியதால், முஜாமிலுக்கு அந்த வீட்டை வாடகைக்கு, உரிமையாளர் கொடுத்து உள்ளார். குண்டுவெடிப்பு நடந்த 20 நாட்களுக்கு முன்பு, முஜாமில் பெங்களூரு சென்று விட்டார். அவர் கைதான பின்னர், வீட்டை பூட்டிவிட்டு அவரது தாய் தலைமறைவானதும் தெரிய வந்து உள்ளது.






      Dinamalar
      Follow us