sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பி.எம்.டி.சி., பஸ்சில் பாம்பால் பயணியர் 'கிலி'

/

பி.எம்.டி.சி., பஸ்சில் பாம்பால் பயணியர் 'கிலி'

பி.எம்.டி.சி., பஸ்சில் பாம்பால் பயணியர் 'கிலி'

பி.எம்.டி.சி., பஸ்சில் பாம்பால் பயணியர் 'கிலி'


ADDED : செப் 08, 2024 06:58 AM

Google News

ADDED : செப் 08, 2024 06:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: பி.எம்.டி.சி., மின்சார பஸ்சுக்குள், பாம்பை பார்த்து பயணியர் பீதியடைந்தனர்.

பெங்களூரின் கே.ஆர்., மார்க்கெட்டில் இருந்து, கே.ஆர்., புரத்துக்கு நேற்று முன் தினம் மாலை, பி.எம்.டி.சி., மின்சார பஸ் சென்று கொண்டிருந்தது. பஸ்சில் பயணியர் கூட்டம் அதிகம் இருந்தது.

பஸ்சின் பின்புற கண்ணாடியில் பாம்பு ஒன்று காணப்பட்டது. இதை பயணியரோ, நடத்துனரோ கவனிக்கவில்லை. பஸ்சின் பின்னால் வந்து கொண்டிருந்த லாரி டிரைவர் கவனித்தார்.

பஸ் டிரைவரிடம் தெரிவித்தார். அவரும் பஸ்சை நிறுத்திவிட்டு, பின்புற கண்ணாடியில் பாம்பு இருப்பதை பயணியரிடம் தெரிவித்தார். கிலியடைந்த பயணியர், கீழே இறங்கினர்.

மாநகராட்சியின், வனப்பிரிவு ஊழியர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த அவர்கள் பாம்பை பிடித்து, பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு சென்றனர்.

இந்த மின்சார பஸ் டிப்போ எண் 29சை சேர்ந்ததாகும். பாம்பு எப்படி, எங்கு பஸ்சுக்குள் புகுந்தது என, தெரியவில்லை. அது கண்ணாடிக்குள் சிக்கிக் கொண்டதால், வெளியே வர முடியவில்லை. இல்லாவிட்டால் பயணியருக்கு அபாயம் ஏற்பட்டிருக்கும்.






      Dinamalar
      Follow us