sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

அசாமில் 24 இடங்களில் வெடிகுண்டுகள்? சுதந்திர தினத்தை சீர்குலைக்க உல்பா சதி

/

அசாமில் 24 இடங்களில் வெடிகுண்டுகள்? சுதந்திர தினத்தை சீர்குலைக்க உல்பா சதி

அசாமில் 24 இடங்களில் வெடிகுண்டுகள்? சுதந்திர தினத்தை சீர்குலைக்க உல்பா சதி

அசாமில் 24 இடங்களில் வெடிகுண்டுகள்? சுதந்திர தினத்தை சீர்குலைக்க உல்பா சதி

1


ADDED : ஆக 15, 2024 11:58 PM

Google News

ADDED : ஆக 15, 2024 11:58 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குவஹாத்தி, : சுதந்திர தின கொண்டாட்டத்தை சீர்குலைக்கும் வகையில், அசாமில் 24 இடங்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக, 'உல்பா' பயங்கரவாதிகள் மிரட்டல் விடுத்ததால் பீதி ஏற்பட்டது.

இதையடுத்து மாநிலம் முழுதும் தீவிர சோதனை நடத்தப்பட்டது.

நாடு முழுதும் நேற்று சுதந்திர தினம் விமரிசையாக கொண்டாடப்பட்டது. வடகிழக்கு மாநிலமான அசாமில் நடந்த சுதந்திர தின கொண்டாட்டங்களை சீர்குலைக்கும் வகையில், தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான உல்பா பயங்கரவாத அமைப்பு, பல்வேறு ஊடகங்களுக்கு மிரட்டல் இ - மெயில் அனுப்பி இருந்தது.

மிரட்டல்


அதில், 'அசாமின் குவஹாத்தி உட்பட 24 இடங்களில் ஒரே நேரத்தில் வெடிகுண்டுகளை வெடிக்க திட்டமிட்டிருந்தோம். தொழில்நுட்ப கோளாறால் அவை வெடிக்கவில்லை' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதை தொடர்ந்து, வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்த இடங்களுக்கு பாதுகாப்பு படையினர் மெட்டல் டிடெக்டர், மோப்ப நாய்கள், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்களுடன் விரைந்து சென்றனர்.

அங்கு தீவிர தேடுதல் வேட்டை நடத்தியும் வெடிகுண்டுகளோ, வெடிமருந்தோ கைப்பற்றப்படவில்லை.

இந்நிலையில், நாகோவுன், லட்சுமிபூர், சிவசாகர் பகுதிகளை சேர்ந்த போலீசார், உல்பா பயங்கரவாதிகள் மிரட்டல் விடுத்திருந்த சில இடங்களில் இருந்து வெடிபொருள் போன்ற பொருட்களை பறிமுதல் செய்ததாக தெரிவித்தனர்.

தீவிர சோதனை


அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா மற்றும் அமைச்சர்களின் அதிகாரப்பூர்வ இல்லம் அமைந்துள்ள பகுதிகளிலும் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டு உள்ளதாக பயங்கரவாதிகள் குறிப்பிட்டிருந்தனர். அங்கும் தீவிர சோதனை நடந்தது.






      Dinamalar
      Follow us