லஞ்ச அதிகாரி வீட்டில் கட்டுக்கட்டாக ரொக்க பணம் பறிமுதல்
லஞ்ச அதிகாரி வீட்டில் கட்டுக்கட்டாக ரொக்க பணம் பறிமுதல்
ADDED : ஆக 10, 2024 02:16 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஐதராபாத்: தெலுங்கானாவில் லஞ்ச அதிகாரி வீட்டில் நடந்த ரெய்டில் ரூ. 3 கோடி ரொக்க பணம் மற்றும் நகைகள் ,சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாநகராட்சியில் வருவாய்த்துறையின் கண்காணிப்பாளராக பணியாற்றி வருபவர் தாசரி நரேந்தர். இவர் மீது பல்வேறு ஊழல் புகார்கள் எழுந்தன.
நேற்று இவரது வீட்டில் லஞ்ச ஒழிப்பு தனிப்படை போலீசார் அதிரடியாக நுழைந்து ரெய்டு நடத்தினர். இதில் கணக்கில் வராத ரூ. 3 கோடி ரொக்கப்பணம், மற்றும் தங்க நகைகள், சொத்து ஆவணங்களை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ. 6 கோடி என கூறப்படுகிறது. லஞ்ச அதிகாரி மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

