sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

அண்ணி கள்ள தொடர்பை கண்டித்த மைத்துனர் கொலை

/

அண்ணி கள்ள தொடர்பை கண்டித்த மைத்துனர் கொலை

அண்ணி கள்ள தொடர்பை கண்டித்த மைத்துனர் கொலை

அண்ணி கள்ள தொடர்பை கண்டித்த மைத்துனர் கொலை


ADDED : மே 28, 2024 06:23 AM

Google News

ADDED : மே 28, 2024 06:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கலபுரகி: அண்ணியுடன் கள்ளத்தொடர்பை தட்டிக்கேட்ட மைத்துனர் கொலை செய்யப்பட்டார்.

கலபுரகி ஆளந்தாவின் முன்னோள்ளி கிராமத்தில் வசித்தவர் ஹிராலால் லதாப், 35. இவர் சிறு, சிறு ஒப்பந்த பணிகளை செய்தார். இவரது அண்ணி, அதே கிராமத்தை சேர்ந்த ரவி என்பவருடன், கள்ளத்தொடர்பு வைத்திருந்தார். இந்த விஷயம் ஹிராலால் லதாபுக்கும், அவரது அண்ணன் பாபு லதாபுக்கும் தெரியவந்தது.

ரவியை, பாபு லதாப் கண்டித்தார். நான்கு குழந்தைகளை வைத்துக்கொண்டு, தகாத முறையில் நடக்க வேண்டாம் என, மனைவிக்கும் புத்திமதி கூறினார். இதை பொருட்படுத்தாத மனைவி, கள்ளத்தொடர்பை தொடர்ந்தார். இதனால் மனம் வெறுத்த கணவர் பாபு லதாப், ஒன்றரை ஆண்டுக்கு முன் வீட்டை விட்டு சென்றுவிட்டார்.

அண்ணன் ஊரை விட்டு சென்றதால், வருத்தமடைந்த ஹிராலால் லதாப், ரவியையும், தன் அண்ணியையும் கண்டித்தார். ஆனால் இருவரும் திருந்தவில்லை.

நேற்று காலை, ஹிராலால் தன் நண்பர்களுடன் மதுபானம் அருந்தி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ரவி, குடிபோதையில் இருந்த ஹிராலாலை, கல்லால் மனம் போனபடி தாக்கிவிட்டு தப்பியோடினார். காயமடைந்த இவர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

நரோனா போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us