sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

அதிகாரிகள் தொல்லையால்  பஸ் டிரைவர் தற்கொலை முயற்சி  

/

அதிகாரிகள் தொல்லையால்  பஸ் டிரைவர் தற்கொலை முயற்சி  

அதிகாரிகள் தொல்லையால்  பஸ் டிரைவர் தற்கொலை முயற்சி  

அதிகாரிகள் தொல்லையால்  பஸ் டிரைவர் தற்கொலை முயற்சி  


ADDED : மார் 25, 2024 06:50 AM

Google News

ADDED : மார் 25, 2024 06:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஷிவமொகா: அதிகாரிகள் தொல்லையால் அரசு பஸ் டிரைவர், பஸ்சில் விஷம் குடித்து, தற்கொலைக்கு முயன்றார்.

தாவணகெரேயை சேர்ந்தவர் பசவராஜ், 38. கர்நாடக அரசு போக்குவரத்து கழகத்திற்கு உட்பட்ட, ஒன்னாளி போக்குவரத்து பணிமனையில், டிரைவராக வேலை செய்கிறார். ஒன்னாளி - ஷிவமொகா அரசு பஸ்சை இயக்குகிறார்.

நேற்று மதியம் 2:00 மணிக்கு, ஷிவமொகா பஸ் நிலையத்தில் பஸ் நின்றது. பயணியர் பஸ்சுக்குள் ஏறிய போது, வாயில் நுரைதள்ளிய நிலையில், பசவராஜ் மயங்கி கிடந்தார்.

அதிர்ச்சி அடைந்த பயணியர் அவரை மீட்டு, ஷிவமொகா மெக்கான் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, பசவராஜ் விபத்து ஏற்படுத்தி இருந்தார். அவருக்கு பணிமனை அதிகாரிகள், மெமோ கொடுத்து இருந்தனர்.

அதன்பின்னரும் தொடர்ந்து, அதிகாரிகள் தொல்லை கொடுத்து வந்தனர். இதனால் மனம் உடைந்த பசவராஜ், தற்கொலைக்கு முயன்றதாக, அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டி உள்ளனர். ஷிவமொகா டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us