sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

குழந்தைகளை சித்திரவதை செய்தவர் மீது வழக்கு

/

குழந்தைகளை சித்திரவதை செய்தவர் மீது வழக்கு

குழந்தைகளை சித்திரவதை செய்தவர் மீது வழக்கு

குழந்தைகளை சித்திரவதை செய்தவர் மீது வழக்கு


ADDED : ஜூலை 13, 2024 08:19 PM

Google News

ADDED : ஜூலை 13, 2024 08:19 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மஹராஜ்கஞ்ச்:உத்தர பிரதேச மாநிலம், மஹராஜ்கஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுதர்சன். இவருக்கு சொந்தமான தோட்டத்தில், மூன்று குழந்தைகள் மாம்பழங்கள் பறித்து சாப்பிட்டனர். அதைப் பார்த்து ஆத்திரம் அடைந்த சுதர்சன், மூவரையும் மரத்தில் கட்டி வைத்து சரமாரியாக தாக்கினார். மேலும், மூவரின் வாயிலும் மாம்பழங்களை திணித்து சித்திரவதை செய்துள்ளார்.

இந்தக் காட்சிகளை அங்கிருந்த சிலர், மொபைல் போனில் 'வீடியோ' எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். அது வேகமாக பரவியது. இந்தக் காட்சிகளைப் பார்த்த ஏராளமானோர் சுதர்சனுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்தச் சம்பவம் குறித்து அறிந்த மஹாராஜ்கஞ்ச் போலீசார், சுதர்சன் மீது வழக்குப் பதிவு செய்து அவரைத் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us