sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கூட்டுறவு வங்கியில் மோசடி; மேலாளர் மீது வழக்கு

/

கூட்டுறவு வங்கியில் மோசடி; மேலாளர் மீது வழக்கு

கூட்டுறவு வங்கியில் மோசடி; மேலாளர் மீது வழக்கு

கூட்டுறவு வங்கியில் மோசடி; மேலாளர் மீது வழக்கு


ADDED : ஜூலை 02, 2024 09:35 PM

Google News

ADDED : ஜூலை 02, 2024 09:35 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிக்கபல்லாபூர் : விவசாயிகள் பெயரில், போலி ஆவணம் தயாரித்து 11 கோடி ரூபாய் மோசடி செய்ததாக, கூட்டுறவு வங்கி மேலாளர் மீது வழக்குப் பதிவாகிஉள்ளது.

சிக்கபல்லாபூர் மாவட்டம், சிந்தாமணியில் கோலார்- சிக்கபல்லாபூர் மாவட்ட கூட்டுறவு வங்கி உள்ளது. இந்த வங்கியில் மேலாளராக பணியாற்றியவர் சந்திரசேகர், 54.

இவர் விவசாயிகள் பெயரில் போலியாக கணக்கு துவங்கி, விவசாயிகளுக்கு அரசிடம் இருந்து வந்த நிதியை மோசடியாக அபகரித்ததாக இரண்டு மாதங்களுக்கு முன்பு குற்றச்சாட்டு எழுந்தது.

இதுகுறித்து உயர் அதிகாரிகள் கவனத்திற்கு விவசாயிகள் கொண்டு சென்றனர். ஆனால் சந்திரசேகர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதையடுத்து சந்திரசேகர் மீது பிரதாப் என்ற விவசாயி, கடந்த மாதம் 26ம் தேதி, சிந்தாமணி போலீசில் புகார் செய்தார். போலீசார் நடத்திய விசாரணையில், விவசாயிகள் பெயரில் வங்கி கணக்கு தொடங்கி 11 கோடி ரூபாயை சந்திரசேகர் ஆட்டையை போட்டது தெரிய வந்தது.

நேற்று முன்தினம் அவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். விசாரணைக்கு ஆஜராக அவருக்கு சம்மன் அனுப்பவும் முடிவு செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us