sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ரங்கநாதர் கோவிலில் பிரசாரம் ஈஸ்வரப்பா மீது வழக்கு பதிவு

/

ரங்கநாதர் கோவிலில் பிரசாரம் ஈஸ்வரப்பா மீது வழக்கு பதிவு

ரங்கநாதர் கோவிலில் பிரசாரம் ஈஸ்வரப்பா மீது வழக்கு பதிவு

ரங்கநாதர் கோவிலில் பிரசாரம் ஈஸ்வரப்பா மீது வழக்கு பதிவு


ADDED : மார் 31, 2024 11:08 PM

Google News

ADDED : மார் 31, 2024 11:08 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஷிவமொகா: ஷிவமொகா தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட தயாராகும், பா.ஜ.,வின் முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா மீது தேர்தல் நடத்தை விதிமீறல் வழக்கு பதிவாகியுள்ளது.

முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா, இம்முறை லோக்சபா தேர்தலில், ஹாவேரி தொகுதியில் தன் மகன் காந்தேஷுக்கு 'சீட்' எதிர்பார்த்தார். ஆனால் கிடைக்கவில்லை. இதற்கு எடியூரப்பா குடும்பத்தினரே காரணம். ஷிவமொகா தொகுதியில் ராகவேந்திராவை எதிர்த்து, நானே சுயேச்சையாக களமிறங்குவேன். என் வெற்றி உறுதி என, சூளுரைத்தார்.

பேச்சோடு நிற்காமல், சுயேச்சை வேட்பாளராக வேட்பு மனு தாக்கல் செய்யவும், ஈஸ்வரப்பா தயாராகிறார். மடாதிபதிகளை சந்தித்து ஆதரவு கேட்கிறார். தொகுதியில் பிரசாரத்திலும் ஈடுபட்டுள்ளார்.

ஷிவமொகாவின் கோபால கிராமத்தில் உள்ள ரங்கநாத சுவாமி கோவிலுக்கு, நேற்று முன்தினம் சென்றார். அங்கு பிரசாரம் செய்தார். கோவிலில் பிரசாரம் செய்தது, தேர்தல் விதிமீறலாகும்.

எனவே இவர் மீது, துங்காநகர் போலீஸ் நிலையத்தில், தேர்தல் அதிகாரி நேற்று புகார் செய்தார். போலீசாரும், ஈஸ்வரப்பா மீது வழக்கு பதிவு செய்து உள்ளனர்.






      Dinamalar
      Follow us