sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

துாங்குவதற்கு முன்பு வரை செல்போன் பயன்பாடு அதிகம்

/

துாங்குவதற்கு முன்பு வரை செல்போன் பயன்பாடு அதிகம்

துாங்குவதற்கு முன்பு வரை செல்போன் பயன்பாடு அதிகம்

துாங்குவதற்கு முன்பு வரை செல்போன் பயன்பாடு அதிகம்


ADDED : மார் 22, 2024 01:20 AM

Google News

ADDED : மார் 22, 2024 01:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:தலைநகர் டில்லியில், 88 சதவீத மக்கள் துாங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு வரை செல்போன் பயன்படுத்துவது ஓர் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

தேசிய தலைநகர் பிராந்தியத்தில் வாழும் மக்களின் செல்போன் பயன்பாடு குறித்து தனியார் இணையதளம் ஆய்வு நடத்தியது. ஏழாவது பதிப்பின் ஆய்வு குறித்த முடிவுகளை அந்த இணையதளம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, தலைநகர் பிராந்தியத்தில் வாழும் 48 சதவீத மக்கள் இரவு 11:00 மணிக்குப் பிறகே துாங்கச் செல்கின்றனர்.

புதுடில்லியின் 88 சதவீத மக்கள், துாங்குவதற்கு சில நிமிடங்கள் முன்பு வரை செல்போனை பயன்படுத்துவது தெரிய வந்துள்ளது.

குருகிராமில், 95 சதவீத மக்களுக்கு இந்தப் பழக்கம் இருக்கிறது.

தலைநகரின் 52 சதவீத மக்கள், தங்களுக்கு காலை புத்துணர்வுடன் விடிவதில்லை என்று தெரிவித்துள்ளனர்.

துாங்க செல்வதற்கு முன்பு டிஜிட்டல் சாதனங்கள் பயன்படுத்துவதை தவிர்த்தால், நன்றாக துாங்க முடியுமென, 36 சதவீத டில்லி மக்களும் 41 சதவீத குருகிராம் மக்களும் நம்புகின்றனர்.






      Dinamalar
      Follow us