sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

அமைதியை மீட்டெடுக்க தவறிய மத்தியப்படைகள்: ஆளுங்கட்சி எம்.எல்.ஏ., மணிப்பூரில் கொந்தளிப்பு

/

அமைதியை மீட்டெடுக்க தவறிய மத்தியப்படைகள்: ஆளுங்கட்சி எம்.எல்.ஏ., மணிப்பூரில் கொந்தளிப்பு

அமைதியை மீட்டெடுக்க தவறிய மத்தியப்படைகள்: ஆளுங்கட்சி எம்.எல்.ஏ., மணிப்பூரில் கொந்தளிப்பு

அமைதியை மீட்டெடுக்க தவறிய மத்தியப்படைகள்: ஆளுங்கட்சி எம்.எல்.ஏ., மணிப்பூரில் கொந்தளிப்பு

3


ADDED : செப் 04, 2024 01:27 PM

Google News

ADDED : செப் 04, 2024 01:27 PM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இம்பால்: மணிப்பூரில் வன்முறைக்கு மத்தியில், அமைதியை மீட்டெடுக்க மத்திய படைகள் தவறிவிட்டது என ஆளுங்கட்சி பா.ஜ., எம்.எல்.ஏ., ராஜ்குமார் இமோ சிங் குற்றம்சாட்டி உள்ளார்.

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் முதல்வர் பைரேன் சிங் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு கூகி மற்றும் மெய்டி சமூகத்தினரிடையே கடந்தாண்டு பெரும் கலவரம் ஏற்பட்டு ஏராளமானோர் பலியாகினர். இந்த பிரச்னை சமீபகாலமாக தணிந்திருந்தாலும், அவ்வப்போது சிறு கலவரங்கள் வெடிக்கின்றன.

இந்நிலையில், மணிப்பூர் மாநிலத்தில் நடந்து வரும் வன்முறைக்கு எதிராக அவசர நடவடிக்கை எடுக்குமாறு, மணிப்பூர் பா.ஜ., எம்.எல்.ஏ., ராஜ்குமார் இமோ சிங் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் அமித்ஷாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: 60 ஆயிரம் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் இருந்தும் வன்முறைகள் நடப்பது கவலை அளிக்கிறது. அமைதியை மீட்டெடுக்க மத்திய படைகள் தவறிவிட்டது. எந்த பயனும் இல்லாத இந்த பாதுகாப்பு படையினர் எதற்கு?

இந்தப் படைகள் வெறும் பார்வையாளர்களாக இருந்தால், அவர்களை அகற்றிவிட்டு, மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் பணியை மாநில அரசிடம் ஒப்படைத்துவிடலாம். 16 மாத அமைதியின்மைக்கு பிறகும் கூட, சட்டவிரோத ஆயுதமேந்திய போராளிகளால் நடத்தப்படும் வன்முறையை பாதுகாப்பு படையினர் கட்டுப்படுத்தவில்லை. நிரந்தர அமைதியை உருவாக்க மத்திய உள்துறை அமைச்சகத்தின் நடவடிக்கை அவசியம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us