பஞ்சாப் எல்லையில் சீன தயாரிப்பு டிரோன்கள் பறிமுதல்
பஞ்சாப் எல்லையில் சீன தயாரிப்பு டிரோன்கள் பறிமுதல்
UPDATED : ஏப் 22, 2024 02:49 AM
ADDED : ஏப் 22, 2024 02:43 AM

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் எல்லைப்பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் சீன தயாரிப்பு டிரோன்கள் இரண்டு மீட்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.
பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் மாவட்டத்தில் இரண்டு வெவ்வேறு இடங்களில் ஆளில்லா விமானங்கள் இருப்பதாக உளவு துறைக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் எல்லை பாதுகாப்பு படை மற்றும் பஞ்சாப் போலீஸ் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது சீனாவில் தயாரிக்கப்பட்ட டிரோன்கள் இரண்டு இருப்பது கண்டறியப்பட்டு மீட்கப்பட்டன.
கடந்த 20 ம் தேதி பெரோஸ்பூர் மாவட்டத்தின் எல்லைப்பகுதியில் சரக்குகளுடன் ஆளில்லா விமானம் இருப்பதாக பி.எஸ்.எப் படைக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சோதனைசெய்த போது சந்தேகத்திற்கிடமான வகயைில் 2710 கிலோ எடையுள்ள மூன்று ஹெராயின் பாக்கெட்டுக்களை கொண்டு சென்ற டிரோன் மீட்கப்பட்டது. குறிப்பிடத்தக்கது.

