sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சர்வாதிகாரத்தால் சிறையில் இருக்கிறார் முதல்வர்: கெஜ்ரிவால் மனைவி குற்றச்சாட்டு

/

சர்வாதிகாரத்தால் சிறையில் இருக்கிறார் முதல்வர்: கெஜ்ரிவால் மனைவி குற்றச்சாட்டு

சர்வாதிகாரத்தால் சிறையில் இருக்கிறார் முதல்வர்: கெஜ்ரிவால் மனைவி குற்றச்சாட்டு

சர்வாதிகாரத்தால் சிறையில் இருக்கிறார் முதல்வர்: கெஜ்ரிவால் மனைவி குற்றச்சாட்டு

17


ADDED : ஆக 15, 2024 11:06 AM

Google News

ADDED : ஆக 15, 2024 11:06 AM

17


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரை, சர்வாதிகாரத்தால் சிறையில் அடைக்க முடியும். ஆனால் இதயத்தில் உள்ள தேசபக்தியை எப்படி தடுத்து நிறுத்த முடியும்? என டில்லி முதல்வர் கெஜ்ரிவால் மனைவி சுனிதா கேள்வி எழுப்பி உள்ளார்.

சுதந்திர தினத்தையொட்டி, சமூக வலைதளத்தில் டில்லி அமைச்சர் அதிஷி வெளியிட்ட அறிக்கை: 1947ம் ஆண்டு பிரிட்டிஷ் சர்வாதிகாரத்தில் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்ற தினம் இன்று. நூற்றுக்கணக்கான விடுதலைப் போராளிகள் தடியடியை எதிர்கொண்டு, சிறைக்குச் சென்று, உயிரைத் தியாகம் செய்தார்கள்.

சுதந்திர இந்தியாவில், முதல்வர் ஒருவர் பொய் வழக்கில், மாதக்கணக்கில் சிறையில் அடைக்கப்படுவார் என்ற எண்ணம் அவர்களது கனவில் கூட தோன்றியிருக்காது. சர்வாதிகாரத்திற்கு எதிராக இறுதி மூச்சு வரை போராடுவோம் என்று இந்த சுதந்திர தினத்தில் உறுதிமொழி எடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

கெஜ்ரிவால் மனைவி சுனிதா

''இன்று முதல்வர் இல்லத்தில் தேசிய கொடி ஏற்றப்படவில்லை. மிகவும் வருத்தம். தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரை சர்வாதிகாரத்தால் சிறையில் அடைக்க முடியும். ஆனால் இதயத்தில் உள்ள தேசபக்தியை எப்படி தடுத்து நிறுத்த முடியும்?'' என சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us