sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கே.ஆர்.எஸ்., அணையில் 27ல் முதல்வர் பூஜை

/

கே.ஆர்.எஸ்., அணையில் 27ல் முதல்வர் பூஜை

கே.ஆர்.எஸ்., அணையில் 27ல் முதல்வர் பூஜை

கே.ஆர்.எஸ்., அணையில் 27ல் முதல்வர் பூஜை

1


ADDED : ஜூலை 22, 2024 06:40 AM

Google News

ADDED : ஜூலை 22, 2024 06:40 AM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாண்டியா: காவிரி நீர்ப்பாசன பகுதிகளில், கன மழை பெய்து வருகிறது. கே.ஆர்.எஸ்., அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. வரும் 27ல் முதல்வர் சித்தராமையா, கே.ஆர்.எஸ்., அணைக்கு சமர்ப்பண பூஜை செய்ய உள்ளார்.

ஸ்ரீரங்கபட்டணா காங்கிரஸ் எம்.எல்.ஏ., பன்டி சித்தேகவுடா நேற்று அளித்த பேட்டி:

காவிரி நீர்ப்பாசன பகுதிகளில், நல்ல மழை பெய்கிறது. மாண்டியாவின், ஸ்ரீரங்கபட்டணாவில் உள்ள கே.ஆர்.எஸ்., அணை நிரம்ப, 2 டி.எம்.சி., தண்ணீர் தேவை. மழை நீடிப்பதால் எந்த நேரத்திலும் அணை நிரம்பும்.

கே.ஆர்.எஸ்., அணை நிரம்புவது, பண்டிகை போன்றதாகும். வரும் 27ல் கே.ஆர்.எஸ்., அணைக்கு, முதல்வர் சித்தராமையா சமர்ப்பண பூஜை செய்கிறார். துணை முதல்வர் சிவகுமார், அமைச்சர்கள், மாண்டியா, மைசூரு பகுதிகளின் அனைத்து எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்பர்.

அணையில் இருந்து உபரி நீர், வெளியேற்றப்படுகிறது. பெருமளவில் தண்ணீர் திறப்பதால், காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும். ஆற்றங்கரையில் வசிப்போர் கவனமாக இருக்க வேண்டும்.

கால்நடைகளை ஆற்றங்கரையில் மேய விடக்கூடாது. முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பான இடத்துக்கு செல்லுங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us