sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தெற்கு பா.ஜ., - எம்.பி., மீது தேர்தல் நடத்தை விதிமீறல் புகார்

/

தெற்கு பா.ஜ., - எம்.பி., மீது தேர்தல் நடத்தை விதிமீறல் புகார்

தெற்கு பா.ஜ., - எம்.பி., மீது தேர்தல் நடத்தை விதிமீறல் புகார்

தெற்கு பா.ஜ., - எம்.பி., மீது தேர்தல் நடத்தை விதிமீறல் புகார்


ADDED : ஜூன் 22, 2024 01:36 AM

Google News

ADDED : ஜூன் 22, 2024 01:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:

லோக்சபா தேர்தலின்போது நடத்தை விதிகளை தெற்கு டில்லி பா.ஜ., - எம்.பி., ராம்வீர் சிங் பிதுரி மீறியதாக ஆம் ஆத்மி கட்சியின் சவுரப் பரத்வாஜ் குற்றம்சாட்டியுள்ளார்.

செய்தியாளர்களிடம் நேற்று முன்தினம் மாநில அமைச்சர் சவுரப் பரத்வாஜ் கூறியதாவது:

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்த காலகட்டத்தில், ஏப்ரல் 24ம் தேதி, தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலரை ஒரு துாதுக்குழுவினருடன் எம்.பி., ராம்வீர் சிங் பிதுரி சந்தித்துப் பேசியுள்ளார்.

இது மக்கள் பிரதிநிதித்துவச்சட்டத்தின் படி, வாக்காளர்களுக்கு தவறான செய்தியை கொண்டு செல்லும்.

இது தேர்தல் நடத்தை விதிகளை மீறிய சந்திப்பு. இது தேர்தலைக்கூட ரத்து செய்ய வழிவகுக்கும் குற்றமாகும்.

இந்த சந்திப்பு குறித்த தகவல், பா.ஜ.,வின் முன்னாள் எம்.எல்.ஏ., ஒருவரின் முகநுால் பக்கத்தில் இருந்து எனக்கு கிடைத்தது. இந்த சந்திப்பு தொடர்பாக தலைமைச் செயலர் மீது மத்திய உள்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த குற்றச்சாட்டுக்கு பிதுரியிடமிருந்து உடனடி பதில் எதுவும் இல்லை.






      Dinamalar
      Follow us