sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

காங்., - எம்.எல்.ஏ., வீட்டை முற்றுகையிடுவதாக அறிவிப்பு

/

காங்., - எம்.எல்.ஏ., வீட்டை முற்றுகையிடுவதாக அறிவிப்பு

காங்., - எம்.எல்.ஏ., வீட்டை முற்றுகையிடுவதாக அறிவிப்பு

காங்., - எம்.எல்.ஏ., வீட்டை முற்றுகையிடுவதாக அறிவிப்பு


ADDED : ஆக 03, 2024 11:11 PM

Google News

ADDED : ஆக 03, 2024 11:11 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தங்கவயல்: தாழ்த்தப்பட்டோரின் நிதி துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளது. அதை மீட்டுக் கொடுக்க வலியுறுத்தி, தங்கவயல் தனித் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலா வீட்டை முற்றுகையிடப் போவதாக, கோலார் மாவட்ட தலித் பாதுகாப்புப் படை அறிவித்துள்ளது.

இதுகுறித்து கோலார் அதன் தலைவர்கள் வெங்கடேஷ், மற்றும் கோடிகானஹள்ளி ராமையா ஆகியோர் தெரிவித்திருப்பதாவது:

கர்நாடக மாநிலத்தில் 25 ஆயிரம் கோடி ரூபாய் தாழ்த்தப்பட்டோர் நலனுக்காக ஒதுக்கிய பணத்தில் பெரும் மோசடி நடந்துள்ளது.

இப்பிரச்னை தொடர்பாக தங்கவயல் தனித் தொகுதியில் இருந்து தேர்வான காங்கிரசின் ரூபகலா சட்டசபையில் வாய்திறக்கவில்லை.

தங்கவயல் தனித் தொகுதி இடஒதுக்கீடு சலுகையில் சட்டசபைக்குத் தேர்வான ரூபகலா, தாழ்த்தப்பட்டோருக்காக ஒதுக்கிய பணத்தை மீட்பதற்காக வலியுறுத்தி பேச வேண்டும். இதற்காகவே அவரது வீட்டை வரும் 9ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 11:00 மணிக்கு முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us