ADDED : மே 27, 2024 07:37 AM

மைசூரு: ''கர்நாடகாவில் சிறுபான்மையினரை திருப்திபடுத்தும் வகையில் காங்கிரஸ் ஆட்சி செயல்படுகிறது,'' என மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா தெரிவித்தார்.
மைசூரில் நேற்று நடந்த தெற்கு ஆசிரியர் தொகுதி பா.ஜ., - ம.ஜ.த., வேட்பாளர் விவேகானந்தனுக்கு ஆதரவாக வந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் விஜயேந்திரா பேசியதாவது:
கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு ஆட்சிக்கு வந்து ஓராண்டாகியும், வளர்ச்சி பணிகள் எதுவும் நடக்கவில்லை. சட்டம் - ஒழுங்கு முற்றிலும் சீர் குலைந்து உள்ளது. சிறுபான்மையினரை திருப்திபடுத்தும் வகையில் செயல்படுகின்றனர். விதான் சவுதாவில் பாகிஸ்தான் ஆதரவு கோஷம் எழுப்புகின்றனர்.
லோக்சபா தேர்தலில் மக்கள் எங்களுக்கு ஆதரவு அளிப்பர் என்ற நம்பிக்கை உள்ளது. வேட்பாளர் விவேகானந்தன் வெற்றிக்காக இரு கட்சியினரும் உழைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மேலவை தேர்தல் தொடர்பாக, மைசூரில் நடந்த கூட்டத்தில் மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா பேசினார்.

