காங்கிரசின் முதுகெலும்பு கட்சியின் தொண்டர்கள்: ராகுல் "ஐஸ்"
காங்கிரசின் முதுகெலும்பு கட்சியின் தொண்டர்கள்: ராகுல் "ஐஸ்"
ADDED : ஏப் 18, 2024 12:03 PM

புதுடில்லி: காங்கிரஸ் கட்சியின் முதுகெலும்பு தொண்டர்கள் தான் என காங்கிரஸ் எம்.பி., ராகுல் தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தல் முதல்கட்ட ஓட்டுப்பதிவு, 29 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளில் நாளை(ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இந்நிலையில் தொண்டர்களுக்கு வாழ்த்து தெரிவித்து, வீடியோ ஒன்றை ராகுல் எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
முதுகெலும்பு
வீடியோவில் ராகுல் பேசியதாவது: காங்கிரஸ் கட்சியின் முதுகெலும்பு தொண்டர்கள் தான். பா.ஜ.,வும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பும், நமது அரசியலமைப்புச் சட்டம், நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்பு மற்றும் தேர்தல் கமிஷன் மீது தாக்குதல் நடத்துக்கிறது. ஆர்.எஸ்.எஸ்., கொள்கைக்கு எதிராக நீங்கள் தெருக்களிலும், கிராமங்களிலும், எல்லா இடங்களிலும் போராடுகிறீர்கள்.
பாதுகாவலர்கள்
நீங்கள் தான் பாதுகாவலர்கள். மக்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில், தேர்தல் வாக்குறுதியை உருவாக்க எங்களுக்கு உதவியுள்ளீர்கள். நாங்கள் கட்சி தொண்டர்களை நம்புகிறோம். நேசிக்கிறோம்!. கட்சி தொண்டர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். பா.ஜ.,வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

