sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஏழைகளை பாதுகாக்க தவறியதாக ஆம் ஆத்மி அரசு மீது காங்., புகார்

/

ஏழைகளை பாதுகாக்க தவறியதாக ஆம் ஆத்மி அரசு மீது காங்., புகார்

ஏழைகளை பாதுகாக்க தவறியதாக ஆம் ஆத்மி அரசு மீது காங்., புகார்

ஏழைகளை பாதுகாக்க தவறியதாக ஆம் ஆத்மி அரசு மீது காங்., புகார்


ADDED : ஆக 07, 2024 10:20 PM

Google News

ADDED : ஆக 07, 2024 10:20 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பட்லி:ஏழைகளை பாதுகாக்க ஆம் ஆத்மி அரசு தவறிவிட்டதாக டில்லி காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.

பட்லி சட்டசபைத் தொகுதிக்கு உட்பட்ட பால்ஸ்வா பால்பண்ணை பகுதிக்கு மாநில காங்கிரஸ் தலைவர் தேவேந்திர யாதவ் நேற்று சென்றார். அங்கு குடியிருப்புகளை இழந்து தவிக்கும் மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

அப்போது அவர் பேசியதாவது:

ஏழைகளை பாதுகாக்க ஆம் ஆத்மி அரசு தவறிவிட்டது. ஏழை மக்களுடன் டில்லி காங்கிரஸ் துணை நிற்கிறது. உங்கள் வீடுகளை அழிக்க விட மாட்டோம்.

குடிசைப் பகுதிகளை இடமாற்றம் செய்ய வேண்டும் என்ற டில்லி உயர்நீதிமன்ற உத்தரவு, ஏழைகளின் வாழ்வில் கடுமையான உறுதியற்ற தன்மையை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களின் உரிமைகள், வீடுகள் மற்றும் கண்ணியத்திற்காக டில்லி காங்கிரஸ் போராடும்.

அரசாங்கத்தின் இரக்கமற்ற கொள்கையால், ஏழை மக்கள் இடம்பெயர்வதற்கு இடமளிக்க மாட்டோம். ஒவ்வொரு அடியிலும் பால்ஸ்வா பால் பண்ணையின் குடும்பங்களுடன் நாங்கள் நின்றுள்ளோம், தொடர்ந்து நிற்போம்.

இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us