sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

வாக்குறுதியை நிறைவேற்றாத காங்கிரஸ்: ரோடுஷோவில் அனுராக் தாக்கூர் பேச்சு

/

வாக்குறுதியை நிறைவேற்றாத காங்கிரஸ்: ரோடுஷோவில் அனுராக் தாக்கூர் பேச்சு

வாக்குறுதியை நிறைவேற்றாத காங்கிரஸ்: ரோடுஷோவில் அனுராக் தாக்கூர் பேச்சு

வாக்குறுதியை நிறைவேற்றாத காங்கிரஸ்: ரோடுஷோவில் அனுராக் தாக்கூர் பேச்சு

5


ADDED : மே 11, 2024 03:20 PM

Google News

ADDED : மே 11, 2024 03:20 PM

5


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஹமிர்பூர்: ஹிமாச்சல் பிரதேச மாநிலம் ஹமிர்பூர் தொகுதியில் பாஜ., சார்பில் போட்டியிடும் அனுராக் தாக்கூர் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அவர் மக்கள் மத்தியில், காங்கிரசால் வாக்குறுதியளிக்கப்பட்ட ரூ. 1,500 நிதியுதவி உங்களுக்கு கிடைத்துள்ளதா? என கேள்வி எழுப்பினார்.

ஹிமாச்சலப் பிரதேசத்தின் ஹமிர்பூர் தொகுதியில் பா.ஜ., சார்பில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் போட்டியிடுகிறார். இந்த தொகுதிக்கு வரும் ஜூன் 1ம் தேதி (7வது கட்டம்) தேர்தல் நடக்க உள்ளது. ஹமிர்பூர் தொகுதி மக்களை சந்தித்து, அனுராக் தாக்கூர் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இன்று தனது தொகுதியில் அவர் ரோடு ஷோ நடத்தினார்.

வாக்குறுதி என்னாச்சு?

ரோடு ஷோவில் அனுராக் தாக்கூர் பேசியதாவது: நான் கேட்க விரும்புகிறேன். காங்கிரசால் வாக்குறுதியளிக்கப்பட்ட ரூ. 1,500 நிதியுதவி உங்களுக்கு கிடைத்துள்ளதா?. காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஆட்சி அமைத்த முதல் மாதத்திலேயே பெண்களுக்கு ரூ. 1,500 வழங்குவதாக உறுதியளித்தனர். இப்போது 15 மாதங்கள் கடந்துவிட்டன. காங்கிரஸ் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. அவர்கள் மக்கள் பணத்தை கொள்ளையடிக்க விரும்புகிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us