sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

காங்கிரசுக்கு பொய் சொல்வது மட்டும் தான் தெரியும்: பிரதமர் மோடி பிரசாரம்

/

காங்கிரசுக்கு பொய் சொல்வது மட்டும் தான் தெரியும்: பிரதமர் மோடி பிரசாரம்

காங்கிரசுக்கு பொய் சொல்வது மட்டும் தான் தெரியும்: பிரதமர் மோடி பிரசாரம்

காங்கிரசுக்கு பொய் சொல்வது மட்டும் தான் தெரியும்: பிரதமர் மோடி பிரசாரம்

6


UPDATED : மே 19, 2024 04:30 PM

ADDED : மே 19, 2024 01:45 PM

Google News

UPDATED : மே 19, 2024 04:30 PM ADDED : மே 19, 2024 01:45 PM

6


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராஞ்சி: காங்கிரசுக்கு வளர்ச்சி பற்றி எதுவும் தெரியாது. அவர்களுக்கு பொய் சொல்வது மட்டும் தான் தெரியும் என பிரதமர் மோடி கூறினார்.

ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: ஜூன் 4 ஆம் தேதி ஜாம்ஷெட்பூர் தொகுதியில் பா.ஜ., வெற்றி பெறும் என்பதை உங்கள் உற்சாகம் சொல்கிறது. பல ஆண்டுகளாக பா.ஜ., கட்சியின் ஊழியராக பணியாற்றியுள்ளேன். உங்கள் அனைவருக்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். லோக்சபா தேர்தல் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கிறது மற்றும் பலப்படுத்துகிறது.

பொய்

காங்கிரசுக்கு வளர்ச்சி பற்றி எதுவும் தெரியாது. அவர்களுக்கு பொய் சொல்வது மட்டும் தான் தெரியும். ஏழைகளின் பணத்தைப் பறிப்பது, எஸ்.சி, எஸ்.டி., ஓ.பி.சி., சமூகத்தின் இடஒதுக்கீட்டைப் பறிக்க காங்கிரஸ் முயற்சி செய்கிறது. இதைத் தாண்டி அவர்களால் எதையும் சிந்திக்க முடியாதா?.

50 முறை

இண்டியா கூட்டணியினர் மக்களிடம் பொய் சொல்கிறார்கள். அவர்களின் யார் என்று முழு நாட்டிற்கும் தெரியும். கட்சி ஆளும் மாநிலங்களில் முதலீடு செய்வதற்கு முன்பு, எந்த ஒரு தொழிலதிபரும் 50 முறை யோசிப்பார்கள். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

பணமூட்டைகள்

மேற்கு வங்க மாநிலம் புருலியாவில் நடந்த தேர்தல் பேரணியில், பிரதமர் மோடி பேசியதாவது: திரிணமுல் காங்கிரசும், காங்கிரஸ் கட்சியும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். காங்கிரஸ் தலைவர்களின் வீடுகளில் ஏராளமான பணம் சிக்கியுள்ளது. காங்கிரஸ், திரிணமுல் காங்கிரஸ் தலைவர்களிடம் பண மூட்டைகள் உள்ளன.
ஆனால் நான் உங்களிடமிருந்து எதையாவது மறைத்திருக்கிறேனா?. சந்தேஷ்காலி சம்பவம் மேற்குவங்க பெண்களை உலுக்கியது. திரிணமுல் காங்கிரஸ் மீது மக்கள் நம்பிக்கையை இழந்து விட்டனர். மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க இண்டியா கூட்டணியினர் விரும்புகிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.








      Dinamalar
      Follow us