sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மின் கட்டண உயர்வு காங்கிரஸ் போராட்டம்

/

மின் கட்டண உயர்வு காங்கிரஸ் போராட்டம்

மின் கட்டண உயர்வு காங்கிரஸ் போராட்டம்

மின் கட்டண உயர்வு காங்கிரஸ் போராட்டம்


ADDED : ஜூலை 17, 2024 09:52 PM

Google News

ADDED : ஜூலை 17, 2024 09:52 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி,:டிஸ்காம்களின் மின் கட்டண உயர்வைக் கண்டித்து, டில்லி காங்கிரஸ் தலைவர்கள் நேற்று தேசிய தலைநகர் முழுவதும் 55க்கும் மேற்பட்ட இடங்களில் போராட்டம் நடத்தினர்.

டிஸ்காம்களுடன் கூட்டுச் சேர்ந்ததாகக் குற்றஞ்சாட்டி, ஆம் ஆத்மி தலைமையிலான டில்லி அரசுக்கு எதிராகப் பதாகைகளை ஏந்தி, காங்கிரஸ் கட்சியினர் முழக்கங்களை எழுப்பினர்.

மண்டி ஹவுஸ் மெட்ரோ நிலையத்திற்கு வெளியே கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடம் மாநில காங்கிரஸ் தலைவர் தேவேந்திர யாதவ் பேசியதாவது:

மின் கட்டணத்தை பாதியாகக் குறைப்பதாக உறுதியளித்த கெஜ்ரிவால் அரசு, கடந்த பத்தாண்டுகளில் பின்கதவு நடவடிக்கைகளின் மூலம் அவற்றை இரட்டிப்பாக்கியுள்ளது.

காங்கிரஸ் ஆட்சியில் ஒரு யூனிட் சராசரியாக 5 ரூபாயாக இருந்தது. தற்போது 10 ரூபாயாக உயர்ந்துள்ளது. அரவிந்த் கெஜ்ரிவால் கொடுத்த வாக்குறுதியில் பாதிக்கு பாதியில் மின்சாரம் தருவதாக கூறியதை நிறைவேற்றியிருந்தால், மின் கட்டணம் 2.50 ரூபாயாக குறைந்திருக்க வேண்டும்.

இந்த மின் கட்டண உயர்வால் கடைக்காரர்கள், சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் பொதுவான குடும்பங்கள் மீது கடும் நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளாக மின்சார நுகர்வோர் மீது கூடுதல் நிதிச் சுமையை ஏற்படுத்துவதற்காக, ஒவ்வொரு ஆண்டும் 6 முதல் 10 சதவீதம் வரை உயர்த்த மின் நிறுவனங்களை கெஜ்ரிவால் அரசாங்கம் அனுமதித்து வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us