sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

காங்., பெண் கவுன்சிலருக்கு ரூ.1 லட்சம் அபராதம்

/

காங்., பெண் கவுன்சிலருக்கு ரூ.1 லட்சம் அபராதம்

காங்., பெண் கவுன்சிலருக்கு ரூ.1 லட்சம் அபராதம்

காங்., பெண் கவுன்சிலருக்கு ரூ.1 லட்சம் அபராதம்


ADDED : ஆக 22, 2024 04:03 AM

Google News

ADDED : ஆக 22, 2024 04:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிக்கமகளூரு,: சட்டவிரோதமாக மூன்று வீடுகளுக்கு மின் இணைப்பு கொடுத்த, காங்கிரஸ் பெண் கவுன்சிலரிடம் இருந்து, அபராதமாக, 1 லட்சம் ரூபாயை மெஸ்காம் அதிகாரிகள் வசூலித்துள்ளனர்.

சிக்கமகளூரின் என்.ஆர்., புரா தாலுகா தேவ்தானா கிராம பஞ்சாயத்து கவுன்சிலர் ஆஷா நாராயண், 51. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். என்.ஆர்., புரா காங்கிரஸ் மகளிர் அணி தலைவியாகவும் உள்ளார்.

இவருக்குச் சொந்தமான மூன்று வீடுகள், என்.ஆர்., புரா அருகே கடபகெரே கிராமத்தில் உள்ளன. இந்த மூன்று வீடுகளுக்கும் மின்கம்பத்தில் இருந்து சட்டவிரோதமாக மின்இணைப்பு கொடுத்து இருப்பதாக, மெஸ்காம் அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன.

நேற்று காலை மங்களூரில் இருந்து வந்த மெஸ்காம் அதிகாரிகள், ஆஷா நாராயண் வீடுகளுக்கு கொடுக்கப்பட்ட, மின் இணைப்புகளை சரிபார்த்தபோது, சட்டவிரோதமாக கொடுக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

பின், ஆஷா நாராயணிடம் இருந்து 1 லட்சம் ரூபாயை, அபராதமாக வசூலித்தனர். கவுன்சிலரே வீட்டிற்கு சட்டவிரோத மின் இணைப்பு கொடுத்தது, தற்போது பேசுபொருளாக மாறி உள்ளது.






      Dinamalar
      Follow us