ADDED : ஜூலை 04, 2024 01:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தலைமறைவாக உள்ளதாகக் கூறப்படும் போலே பாபா நேற்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:
என் சொற்பொழிவு நிகழ்ச்சியில், நுாற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளது வேதனை அளிக்கிறது. அதற்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அதனால், பொது வெளிக்கு வருவதில்லை என்று முடிவு செய்துள்ளேன்.
ஹத்ராசில் நடந்த சம்பவம், சமூக விரோதிகளின் சதித் திட்டமாகும். நிகழ்ச்சியை முடித்து நான் புறப்பட்ட பின், இந்த செயலை நடத்தியுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.