sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கொச்சி-- தனுஷ்கோடி ரோட்டில் பாலம் கட்டும் பணி மும்முரம்

/

கொச்சி-- தனுஷ்கோடி ரோட்டில் பாலம் கட்டும் பணி மும்முரம்

கொச்சி-- தனுஷ்கோடி ரோட்டில் பாலம் கட்டும் பணி மும்முரம்

கொச்சி-- தனுஷ்கோடி ரோட்டில் பாலம் கட்டும் பணி மும்முரம்

1


ADDED : ஜூன் 15, 2024 07:11 AM

Google News

ADDED : ஜூன் 15, 2024 07:11 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூணாறு: கொச்சி, தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் நேரியமங்கலம் பகுதியில் பெரியாறு ஆற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

கொச்சி, தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் இடுக்கி, எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களை இணைக்கும் வகையில் நேரியமங்கலம் பகுதியில் பெரியாறு ஆற்றின் குறுக்கே பழமை வாய்ந்த பாலம் உள்ளது.

பழமையான பாலம்: ஆங்கிலேயர் காலத்தில் வர்த்தக ரீதியாக மூணாறில் இருந்து கல்லார், மாங்குளம், ஆனக்குளம், பூயம்குட்டி வழியாக ஆலுவாவுக்கு போக்குவரத்து இருந்தது. மூணாறில் 1924ல் பெய்த மழை பேரழிவை ஏற்படுத்தியது. அதில் மூணாறு, ஆலுவா ரோடு சீரமைக்க இயலாத வகையில் சேதமடைந்தது. அதன்பிறகு தற்போதுள்ள கொச்சி, தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை மூணாறு, ஆலுவா ரோடாக உருவானது. அப்போது நேரிய மங்கலம் பகுதியில் பெரியாறு ஆற்றின் குறுக்கே பாலம் கட்டுமான பணிகள் 1924ல் திருவிதாங்கூர் அரசி சேதுலட்சுமிபாய் ஆட்சியில் துவங்கி ஸ்ரீ சித்திர திருநாள் ராமவர்மா ஆட்சி காலத்தில் 1935 மார்ச் 2ல் பயன்பாட்டிற்கு வந்தது.

சிறப்பு: இந்த பாலம் தென்னிந்தியாவில் 'ஆர்ச்' வடிவில் கட்டப்பட்ட முதல் பாலமாகும். இடுக்கி மாவட்டத்தில் மலையோர பகுதிகளுக்கு நுழைவு பகுதியாக பாலம் உள்ளதால் 'ஹைரேஞ்ச் நுழைவு வாயில்' எனவும் அழைக்கப்படுகிறது.

அனுமதி: இந்நிலையில் கொச்சி, தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மூணாறு, கொச்சி இடையே ரூ.1250 கோடி செலவில் ரோடு அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது.

அந்த நிதியில் நேரியமங்கலம் பகுதியில் பழைமை வாய்ந்த பாலம் அருகே 214 மீட்டர் நீளம், 1.5 மீட்டர் நடை பாதை உள்பட 11.5 மீட்டர் அகலத்தில் புதிய பாலம் கட்டப்படுகிறது. அதற்கான பணிகள் கடந்த ஜனவரியில் துவங்கியது. தற்போது தூண்கள் அமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.






      Dinamalar
      Follow us