ADDED : ஜூலை 02, 2024 10:25 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சண்டிகர்:ஹரியானா மாநிலம் கர்னாலில் சரக்கு ரயிலில் இருந்து கன்டெய்னர்கள் சரிந்து விழுந்ததால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஹரியானா மாநிலம் அம்பாலாவில் இருந்து புதுடில்லிக்கு நேற்று காலை சரக்கு ரயில் சென்றது. கர்னால் மாவட்டம் தாரோரி அருகே, சரக்கு ரயிலில் இருந்து சில கன்டெய்னர்கள் சரிந்து தண்டவாளத்தில் விழுந்தன. இதனால், டில்லி - -அம்பாலா வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், தண்டவாளம் அருகே மின்கம்பங்களும் சேதம் அடைந்தன.