sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஓய்வு பெற்ற பொறியாளர் பணி நீட்டிப்பால் சர்ச்சை

/

ஓய்வு பெற்ற பொறியாளர் பணி நீட்டிப்பால் சர்ச்சை

ஓய்வு பெற்ற பொறியாளர் பணி நீட்டிப்பால் சர்ச்சை

ஓய்வு பெற்ற பொறியாளர் பணி நீட்டிப்பால் சர்ச்சை


ADDED : ஆக 22, 2024 04:00 AM

Google News

ADDED : ஆக 22, 2024 04:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: ஓய்வு பெறும் குடிசை மாற்று வாரிய தலைமை பொறியாளர் பாலராஜுவுக்கு மேலும் இரண்டு ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்கும்படி, வீட்டு வசதித்துறை அமைச்சர் ஜமீர் அகமது கான் வலியுறுத்தி உள்ளார்.

குடிசை மாற்று வாரிய தலைமை பொறியாளர் பாலராஜு, ஆகஸ்ட் 31ல் ஓய்வு பெறுகிறார். இவருக்கு செப்டம்பர் 1 முதல், இரண்டு ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் பணி நீட்டிப்பு வழங்க வேண்டும் என, வீட்டு வசதித்துறை முதன்மை செயலருக்கு, அமைச்சர் ஜமீர் அகமது கான் கடிதம் எழுதியுள்ளார்.

இதன்படி, தலைமை பொறியாளர் பதவியில், பாலராஜுவை இரண்டு ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் நீட்டிப்பது தொடர்பாக, கோப்பு தயாரித்து முறைப்படி தன்னிடம் அனுப்பும்படி அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

முதல்வர் சித்தராமையா சமீபத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தியபோது, 'வெவ்வேறு துறைகளில் ஒப்பந்த அடிப்படையில் பணி நீட்டிக்கப்பட்ட, ஓய்வு பெற்ற அதிகாரிகளை பணியில் இருந்து விடுவிக்க வேண்டும். ஓய்வு பெற்றவர்களை மீண்டும் பணிக்கு நியமிக்கக் கூடாது' என, உத்தரவிட்டார்.

ஆனால், அதை மீறி அமைச்சர் இத்தகைய உத்தரவை பிறப்பித்தது, சர்ச்சைக்கு காரணமாகி உள்ளது.






      Dinamalar
      Follow us