sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மெட்ரோ 2ம் கட்ட பணிகள் தாமதத்தால் செலவு அதிகரிப்பு

/

மெட்ரோ 2ம் கட்ட பணிகள் தாமதத்தால் செலவு அதிகரிப்பு

மெட்ரோ 2ம் கட்ட பணிகள் தாமதத்தால் செலவு அதிகரிப்பு

மெட்ரோ 2ம் கட்ட பணிகள் தாமதத்தால் செலவு அதிகரிப்பு


ADDED : ஜூலை 25, 2024 10:57 PM

Google News

ADDED : ஜூலை 25, 2024 10:57 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: பெங்களூரில் மெட்ரோ ரயில் திட்டத்தின், இரண்டாம் கட்ட பணிகள் தாமதமாகிறது. இதன் விளைவாக திட்டத்தின் செலவு அதிகரிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பெங்களூரு மெட்ரோ நிறுவனம், முதற்கட்ட பணிகளை வெற்றிகரமாக முடித்தது. இரண்டாம் கட்டத்தில், 72 கி.மீ., தொலைவில் மெட்ரோ பணிகளுக்கு, 2014ல் அரசின் ஒப்புதல் கிடைத்தது.

அதன்பின் 3 கி.மீ., கூடுதலாக சேர்க்கப்பட்டது. 26,405 கோடி ரூபாய் செலவிலான பணிகள், 2019ல் முடிந்திருக்க வேண்டும்.

ஆனால், பணிகள் தாமதமானதால், திட்டத்தின் செலவு 30,695 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டது.

திட்டத்தில் கூடுதல் இடங்கள் சேர்க்கப்பட்டது, கொரோனா தொற்று பரவியது, பண வீக்கம், நிலம் கையகப்படுத்துவதில் பிரச்னை என, பல்வேறு காரணங்களால் இரண்டாம் கட்ட பணிகளுக்கு முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. பணிகள் தாமதமாவதால், திட்ட செலவு 40,000 கோடி ரூபாயை எட்டியது.

கூடுதலாக 10,000 கோடி ரூபாய் தேவை என, மாநில அரசிடம் மெட்ரோ நிறுவனம், வேண்டுகோள் விடுத்துள்ளது.

மெட்ரோ நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:

இரண்டாம் கட்ட பணிகள் தாமதமாவதற்கு, பல காரணங்கள் உள்ளன. 2019ல் முடிந்திருக்க வேண்டிய பணிகளை, இதுவரை முடிக்க முடியவில்லை.

கொரோனா தொற்றுக்கு பின், பல பிரச்னைகள் ஏற்பட்டதால், காலக்கெடுவுக்குள் பணிகளை முடிக்க முடியவில்லை.

ஆரம்பத்தில் நிலத்தை கையகப்படுத்துவதே, பெரும் பிரச்னையாக இருந்தது. இரண்டாம் கட்ட மெட்ரோ பாதை, கெங்கேரியில் முடிவடைய இருந்தது. இது, செல்லகட்டா வரை விஸ்தரிக்கப்பட்டது.

காடுகோடியில் கிழக்கு பகுதியில் மற்றொரு டிப்போவை சேர்த்துள்ளோம். ஏற்கனவே திட்டமிட்டதை விட, கூடுதல் நிலத்தை கையகப்படுத்த வேண்டியுள்ளது. எனவே திட்டத்தின் செலவு அதிகரித்துள்ளது. இதை, அரசிடம் கேட்டுள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us