sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கோவிலை இடித்து மசூதி அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ் 

/

கோவிலை இடித்து மசூதி அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ் 

கோவிலை இடித்து மசூதி அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ் 

கோவிலை இடித்து மசூதி அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ் 


ADDED : மே 30, 2024 10:01 PM

Google News

ADDED : மே 30, 2024 10:01 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு - கோவிலை இடித்து மசூதி கட்டியதாக, தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பாக, கர்நாடக அரசுக்கு, ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

மாண்டியா, ஸ்ரீரங்கப்பட்டணாவில் மன்னர்கள் காலத்திய, மூடலதுார் ஆஞ்சநேயர் கோவில் இருந்தது. விஜயநகர பேரரசர்கள், மைசூருவை ஆண்ட மன்னர்கள், கோவிலுக்கு ஆதரவாக இருந்தனர். ஆனால் திப்பு சுல்தான் ஆட்சியில், கோவிலை இடித்து விட்டு, மசூதி கட்டப்பட்டு உள்ளது.

இதுகுறித்து அகழாய்வு நடத்தி, அறிக்கை தாக்கல் செய்ய, இந்திய தொல்லியல் துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று, கர்நாடக உயர் நீதிமன்றத்தில், பஜ்ரங் தள் அமைப்பினர் மனு செய்தனர்.

அந்த மனுவை தலைமை நீதிபதி என்.வி.அஞ்சாரியா விசாரித்து வருகிறார். நேற்றும் மனு மீதான விசாரணை நடந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர், மனு தொடர்பாக விளக்கம் கேட்டு, கர்நாடக அரசு, இந்திய தொல்லியல் துறைக்கு நோட்டீஸ் அனுப்ப, நீதிபதி என்.வி.அஞ்சாரியா உத்தரவிட்டார். மனு மீதான விசாரணை ஜூலை 11ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us