sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஜப்தி செய்ய வந்த கோர்ட் ஊழியர்கள்; வக்காலத்து வாங்கிய அரசு அதிகாரிகள்

/

ஜப்தி செய்ய வந்த கோர்ட் ஊழியர்கள்; வக்காலத்து வாங்கிய அரசு அதிகாரிகள்

ஜப்தி செய்ய வந்த கோர்ட் ஊழியர்கள்; வக்காலத்து வாங்கிய அரசு அதிகாரிகள்

ஜப்தி செய்ய வந்த கோர்ட் ஊழியர்கள்; வக்காலத்து வாங்கிய அரசு அதிகாரிகள்

1


ADDED : ஆக 02, 2024 11:28 PM

Google News

ADDED : ஆக 02, 2024 11:28 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு : கடனை திருப்பிச் செலுத்தாததால், கட்டடத்தை ஜப்தி செய்ய வங்கி அதிகாரிகள் வந்தனர். அந்த கட்டடத்தில் அரசு அலுவலகங்கள் இயங்கியதால், பரபரப்பான சூழ்நிலை உருவானது.

பெங்களூரின், இன்பென்ட்ரி ரோட்டில் உள்ள எம்பசி கட்டடம், ஜெயராம் என்பவருக்கு சொந்தமானது. இவர் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, இந்த கட்டடத்தின் நான்காவது மாடியை, வங்கியில் அடமானம் வைத்து 19 கோடி ரூபாய் கடன் வாங்கினார். தற்போது அசல், வட்டியுடன் சேர்த்து 24 கோடி ரூபாய் செலுத்த வேண்டியுள்ளது.

பல முறை வங்கி நோட்டீஸ் அளித்தும், ஜெயராம் பொருட்படுத்தவில்லை. எனவே பெங்களூரின், 32வது ஏ.சி.எம்.எம்., நீதிமன்றத்தில் வங்கி அதிகாரிகள் வழக்கு தொடர்ந்தனர்.

விசாரணை நடத்திய நீதிமன்றம், ஜெயராம் அடமானம் வைத்திருந்த கட்டடத்தின் நான்காவது மாடியை, ஜப்தி செய்யும்படி உத்தரவிட்டது.

இதன்படி, எம்பசி கட்டடத்தின் நான்காவது மாடியை ஜப்தி செய்ய, விதான் சவுதா போலீசார், கோர்ட் கமிஷனருடன், வங்கி அதிகாரிகள் நேற்று மதியம் வந்தனர். மாடியில் சுற்றுலாத்துறை உட்பட, அரசு சார்ந்த இரண்டு அலுவலகங்கள் இயங்குகின்றன. கட்டட உரிமையாளர் ஜெயராமுக்கு, மாதந்தோறும் 39 லட்சம் ரூபாய் வாடகை செலுத்துகின்றன.

அலுவலகங்களை காலி செய்ய, வங்கி அதிகாரிகள் வந்ததை அறிந்த, அரசு உயர் அதிகாரிகள், வங்கி முக்கியஸ்தர்களை தொடர்பு கொண்டு பேசினர்.

கடனை செலுத்த கட்டட உரிமையாளர் ஜெயராமுக்கு மூன்று மாத அவகாசம் அளிக்கும்படி கேட்டுக்கொண்டனர். இதற்கு வங்கி அதிகாரிகள் சம்மதித்து, திரும்பிச் சென்றனர்.






      Dinamalar
      Follow us