sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கிரைம் கார்னர்

/

கிரைம் கார்னர்

கிரைம் கார்னர்

கிரைம் கார்னர்


ADDED : ஜூன் 18, 2024 06:25 AM

Google News

ADDED : ஜூன் 18, 2024 06:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விவசாயி தற்கொலை


தார்வாட், நவல்குந்தின் ஆளகவாடி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சோம்பபா ஜோகநாயக்கர், 43. இவர் பயிரிடும் பணிக்காக பல இடங்களில் 6 லட்சம் ரூபாய் கடன் பெற்றிருந்தார். இதை அடைக்க முடியாமல் அவதிப்பட்ட அவர், நேற்று காலை துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ரூ.37 லட்சம் பறிமுதல்


சாம்ராஜ்நகர், குண்டுலுபேட்டின், எல்லைப்பகுதியில் உள்ள சோதனைச்சாவடியில் நேற்று மதியம் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை, சோதனை நடத்திய போது 37 லட்சம் ரூபாய் கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கு ஆவணங்கள் இல்லாததால், பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

நான்கு சிறுவர்கள் பலி


தார்வாடின், மனசூர் கிராமத்தின் புறநகரில் வசித்தவர்கள் சதீஷ், 16, உமேஷ், 16. இவர்கள் நேற்று காலை, கிராமத்தின் கல்குவாரி நீரில் விளையாட சென்றனர். ஆழமான பகுதிக்கு சென்றதால், நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

l மைசூரின், ஹூடகள்ளி ஹவுசிங் போர்டில் வசித்தவர்கள் வருண், 14, ஜஸ்வந்த், 16. இவர்கள் நேற்று மதியம் சாஹுகாரஹுன்டியில் உள்ள ஏரிக்கு சென்றனர். அப்போது நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

கஞ்சா விற்றவர் கைது


கோலார் நகரில், பல இடங்களில் கஞ்சா விற்பனை செய்த, ஒடிசாவை சேர்ந்த பகிரதி பட்ரா, 40, என்பவரை போலீசார் கைது செய்தனர். 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us