ADDED : ஆக 04, 2024 01:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: புகழ்பெற்ற பரதநாட்டியக் கலைஞர் யாமினி கிருஷ்ணமூர்த்தி, 84, உடல்நலக் குறைவால் நேற்று காலமானார்.
ஆந்திராவின் சித்துாரில் உள்ள மதனப்பள்ளியில் பிறந்த யாமினி, சிறு வயது முதலே பரத நாட்டிய கலையில் சிறந்து விளங்கினார். சிதம்பரத்தில் வளர்ந்த இவர், சென்னையில் உள்ள கலாஷேத்ரா நடனப் பள்ளியில் 5 வயது முதல் நடனமாடத் துவங்கினார்.
குச்சிப்புடி, ஒடிசி போன்ற நடனக் கலைகளில் தேர்ச்சி பெற்று, தன் கலையார்வத்தை விரிவுபடுத்திய யாமினி, கர்நாடக இசை மற்றும் வீணை இசையிலும் சிறந்து விளங்கினார். கடந்த சில மாதங்களாக வயது மூப்பு காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த யாமினி, டில்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று அவர் காலமானார்.