sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கிருஷ்ணா ஆற்றில் இறந்த முதலை

/

கிருஷ்ணா ஆற்றில் இறந்த முதலை

கிருஷ்ணா ஆற்றில் இறந்த முதலை

கிருஷ்ணா ஆற்றில் இறந்த முதலை


ADDED : ஏப் 30, 2024 07:47 AM

Google News

ADDED : ஏப் 30, 2024 07:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராய்ச்சூர்: வெயிலின் தாக்கம்விலங்குகளையும் விட்டு வைக்கவில்லை. கிருஷ்ணா ஆற்றில் தண்ணீர் இல்லாததால், முதலை ஒன்று இறந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடுமையான வெப்பம் காரணமாக, கர்நாடகாவின் பல ஆறுகள் வறண்டு வருகின்றன. இங்குள்ள ஆறுகளில் அவ்வப்போது முதலைகள் தென்படுவது உண்டு. தண்ணீர் குடிக்க செல்லும் கால்நடைகள், கால்நடைகளை அழைத்து செல்பவர்களை தாக்கி கொன்றுள்ளன.

ராய்ச்சூர் மாவட்டத்தில் கிருஷ்ணா ஆற்றில் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது. இங்கும் முதலைகள் உள்ளன. தண்ணீர் இன்றி வேறு இடத்துக்கு செல்ல முடியாத முதலை ஒன்று, அங்குள்ள பாறை ஒன்றின் மீது இறந்து கிடந்தது.

வெயிலின் தாக்கத்தால் இறந்த முதலை எலும்பும், தோலுமாக காணப்பட்டது. இறந்து பல நாட்களாகி இருக்கலாம் என தெரியவந்துள்ளது. இதை பார்த்த அப்பகுதியினர், வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

சிலர், தங்கள் மொபைல் போனில் படம் பிடித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us