sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

குழந்தை விற்பனை வழக்கில் டாக்டரின் கிளினிக்கிற்கு 'சீல்'

/

குழந்தை விற்பனை வழக்கில் டாக்டரின் கிளினிக்கிற்கு 'சீல்'

குழந்தை விற்பனை வழக்கில் டாக்டரின் கிளினிக்கிற்கு 'சீல்'

குழந்தை விற்பனை வழக்கில் டாக்டரின் கிளினிக்கிற்கு 'சீல்'


ADDED : ஜூன் 12, 2024 12:17 AM

Google News

ADDED : ஜூன் 12, 2024 12:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெலகாவி : பெலகாவியில் திருமணம் செய்து கொள்ளாமல், கருத்தரிக்கும் பெண்களுக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை வெளியே எடுத்து விற்பனை செய்து வந்த டாக்டரின் கிளினிக்கிற்கு, 'சீல்' வைக்கப்பட்டது.

பெலகாவியில், சட்ட விரோதமாக குழந்தைகள் விற்கப்படுவதாக, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறை, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதன்படி விசாரணை நடத்திய போலீசார், மகாதேவி ஜெயின், பவித்ரா, பிரவீன், சந்தன் சுபேதார், டாக்டர் அப்துல் கபார் கான் ஆகியோரை கைது செய்தனர்.

இந்நிலையில், மாவட்ட கலெக்டர் நித்தேஷ் பாட்டீல் உத்தரவின்படி, தாலுகா சுகாதார அதிகாரி சித்தண்ணவர் தலைமையிலான குழுவினர், சோம்வார்பேட்டையில் உள்ள டாக்டர் அப்துல் கபார் கானின் கிளினிக்கில் ஆய்வு செய்தனர்.

அப்போது அலோபதி மருந்துகள், மருத்துவ உபகரணங்கள், படுக்கைகள் கண்டுபிடிக்கப்பட்டது. இத்துடன் வேறொரு மருத்துவரின் பெயரில், 10 ஆண்டுகள் கிளினிக் நடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அந்த கிளினிக்கிற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

கிளினிக்கை சீல் வைத்த சுகாதார துறை அதிகாரிகள். இடம்: பெலகாவி.






      Dinamalar
      Follow us