sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ரூ.51 கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல்

/

ரூ.51 கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல்

ரூ.51 கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல்

ரூ.51 கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல்


ADDED : ஜூலை 18, 2024 11:47 PM

Google News

ADDED : ஜூலை 18, 2024 11:47 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆமதாபாத்: குஜராத் மாநிலம் சூரத்தில் ஒரு இடத்தில் ரகசியமாக போதை பொருள் தயாரிக்கப்படுவதாக, மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, சூரத்தின் புறநகர் பகுதியில் உள்ள கிராமத்தில் போலீசார் சோதனை நடத்தினர். இதில், ஒரு கிடங்கை வாடகைக்கு எடுத்து சிலர், போதை பொருள் தயாரிப்பது தெரியவந்தது.

இதையடுத்து அங்கு போதை பொருள் தயாரிப்பில் ஈடுபட்டு வந்த சுனில் யாதவ், விஜய் கஜேரா மற்றும் ஹரேஷ் கோரட் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில், தடை செய்யப்பட்ட மெபெட்ரோன் எனும் போதை பொருட்களை அவர்கள் தயாரித்து, மும்பையைச் சேர்ந்த சலீம் சயாத் என்பவருக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.

அவர்களிடமிருந்து, 51.4 கோடி ரூபாய் மதிப்புள்ள, 4 கிலோ மெபெட்ரோன் மற்றும் 31.4 கிலோ மூலப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தலைமறைவாக உள்ள சலீமை போலீசார் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us