sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தசரா யானைகளுக்கு அமாவாசை ஓய்வு

/

தசரா யானைகளுக்கு அமாவாசை ஓய்வு

தசரா யானைகளுக்கு அமாவாசை ஓய்வு

தசரா யானைகளுக்கு அமாவாசை ஓய்வு


ADDED : செப் 02, 2024 10:35 PM

Google News

ADDED : செப் 02, 2024 10:35 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மைசூரு: அமாவாசை என்பதால் நேற்று தசரா யானைகளுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.

மைசூரு தசராவில் பங்கேற்க, முதல்கட்டமாக அபிமன்யு தலைமையில் ஒன்பது யானைகள் நகருக்கு வந்துள்ளன. தினமும் அரண்மனையில் இருந்து பன்னிமண்டபம் வரை நடைப்பயிற்சி அளிக்கப்படுகிறது.

இரண்டு நாட்களுக்கு முன்பு, 520 கிலோ எடை உள்ள மணல் மூட்டையுடன் அபிமன்யு யானைக்கு நடைப்பயிற்சி அளிக்கப்பட்டது. அமாவாசை நாளான நேற்று, யானைகளுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.

இது தொடர்பாக யானைகளின் பாகன்கள் கூறியதாவது:

அமாவாசை, பவுர்ணமி நாட்களில் யானைகளை வெளியே அழைத்துச் செல்ல மாட்டோம். இது மன்னர் காலத்தில் இருந்து அனுசரித்து வரும் முறை. இந்நாட்களில் யானைகளுக்கு மதம் பிடிக்கும் சம்பவங்கள் அல்லது போகும் வழியில் மனம் மாறி குறுக்காக நுழைந்து அட்டகாசம் செய்யும் வாய்ப்புகள் இருக்கின்றன.

எனவே, அமாவாசை நாட்களில் யானை முகாம்களிலும் சரி, இம்மாதிரி நிகழ்ச்சிகளிலும் சரி, கும்கி யானைகளை வெளியே விடுவதில்லை. அவைகள் தங்கி இருக்கும் இடங்களிலேயே கட்டிப் போட்டு விடுவோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஓய்வில் இருந்த யானைகள் குளிப்பாட்டப்பட்டன. இதனால் யானைகள் குதுாகலமடைந்தன. பின், அவற்றுக்கு உணவு வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us