sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

வாடிக்கையாளருக்கு ரூ.5,187 நஷ்டஈடு 'ஸ்விகி' நிறுவனத்துக்கு ேகார்ட் உத்தரவு

/

வாடிக்கையாளருக்கு ரூ.5,187 நஷ்டஈடு 'ஸ்விகி' நிறுவனத்துக்கு ேகார்ட் உத்தரவு

வாடிக்கையாளருக்கு ரூ.5,187 நஷ்டஈடு 'ஸ்விகி' நிறுவனத்துக்கு ேகார்ட் உத்தரவு

வாடிக்கையாளருக்கு ரூ.5,187 நஷ்டஈடு 'ஸ்விகி' நிறுவனத்துக்கு ேகார்ட் உத்தரவு


ADDED : ஏப் 30, 2024 07:50 AM

Google News

ADDED : ஏப் 30, 2024 07:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: பெங்களூரில் ஆர்டர் செய்த வாடிக்கையாளருக்கு 137 ரூபாய் மதிப்புள்ள ஐஸ் கிரீமை வழங்காத 'ஸ்விகி' நிறுவனத்துக்கு, 5,187 ரூபாய் நஷ்டஈடு வழங்கும்படி நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரை சேர்ந்த நபர் ஒருவர், 2023 ஜனவரி 26ம் தேதி 'ஸ்விகி' என்ற செயலி மூலம், 137 ரூபாய் மதிப்புள்ள 'நட்டி டெத் சாக்லேட் ஐஸ்கிரீம்' ஆர்டர் மற்றும் டெலிவரி செய்வதற்காக 50 ரூபாய் என, 187 ரூபாய் செலுத்தி இருந்தார்.

அரைமணி நேரத்திக்கு பின், ஸ்விகி ஊழியர், ஐஸ்கிரீம் உடன் வருவதாக, வாடிக்கையாளருக்கு தகவல் கிடைத்தது. ஆனால், ஸ்விக்கி ஊழியருக்கு வாடிக்கையாளரின் முகவரி தெரியவில்லை என்று கூறியுள்ளார்.

இரண்டு மணி நேரம் கழித்து, ஐஸ்கிரீம் டெலிவரி செய்யப்பட்டதாக, ஆர்டர் செய்த வாடிக்கையாளருக்கு குறுந்தகவல் வந்தது.

அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர், தனக்கு ஐஸ்கிரீம் கிடைக்கவில்லை என, ஸ்விகி நிறுவனத்துக்கு மின்னஞ்சல் மூலம் புகார் செய்தார். 24 மணி நேரத்துக்கு பின்னரும் தான் வழங்கிய பணம் கிடைக்காததால், நுகர்வோர் நீதிமன்றத்தில் ஜன., 31ம் தேதி வழக்கு தொடர்ந்து, நஷ்டஈடு கேட்டிருந்தார். ஸ்விகியில் ஆர்டர் செய்தற்கான அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பித்திருந்தார்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், 'வாடிக்கையாளருக்கு 3,000 ரூபாய் நஷ்டஈடும், வழக்கு கட்டணமாக 2,000 ரூபாயும், வாடிக்கையாளர் செலுத்திய பொருளின் விலை 187 ரூபாயையும் வழங்குமாறு' ஸ்விகி நிறுவனத்துக்கு உத்தரவிட்டது.






      Dinamalar
      Follow us