sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

வீட்டு கூரை இடிந்து முதிய தம்பதி பலி

/

வீட்டு கூரை இடிந்து முதிய தம்பதி பலி

வீட்டு கூரை இடிந்து முதிய தம்பதி பலி

வீட்டு கூரை இடிந்து முதிய தம்பதி பலி


ADDED : ஆக 07, 2024 10:22 PM

Google News

ADDED : ஆக 07, 2024 10:22 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரோகினி:கூரை இடிந்து விழுந்ததில் வயதான தம்பதி உயிரிழந்தனர். அவர்களின் மகன் படுகாயமடைந்தார்.

ரோகினியில் உள்ள பிரேம் நகர் பகுதியில் சுக்ரன், 85, காயத்ரி தேவி, 75, ஆகியோர் தங்கள் மகன் வினோத், 45, உடன் ஒரு வீட்டில் வசித்து வந்தனர். நேற்று முன் தினம் இரவு அவர்கள் வழக்கம்போல் துாங்கச் சென்றனர்.

நேற்று அதிகாலை 2:57 மணி அளவில் வீட்டின் கூரை இடிந்து விழுந்தது. இதுகுறித்து தீயணைப்புப் படை மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு மூன்று தீயணைப்பு வாகனங்கள் விரைந்து சென்றன. இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்திருந்த மூன்று பேரும் மீட்கப்பட்டு சஞ்சய் காந்தி நினைவு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி முதிய தம்பதி உயிரிழந்தனர். சிகிச்சைக்கு பிறகு வினோத் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். பிரேத பரிசோதனைக்குப் பிறகு அவரது பெற்றோரின் உடல்கள் அவரிடம் ஒப்படைக்கப்பட்டன.

பிரேம் நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us