sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

அரசியலமைப்பை காப்பாற்றுவதற்கான தேர்தல்: பிரசாரத்தில் ராகுல் பேச்சு

/

அரசியலமைப்பை காப்பாற்றுவதற்கான தேர்தல்: பிரசாரத்தில் ராகுல் பேச்சு

அரசியலமைப்பை காப்பாற்றுவதற்கான தேர்தல்: பிரசாரத்தில் ராகுல் பேச்சு

அரசியலமைப்பை காப்பாற்றுவதற்கான தேர்தல்: பிரசாரத்தில் ராகுல் பேச்சு

19


UPDATED : மே 06, 2024 04:13 PM

ADDED : மே 06, 2024 02:20 PM

Google News

UPDATED : மே 06, 2024 04:13 PM ADDED : மே 06, 2024 02:20 PM

19


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போபால்: 'அரசியலமைப்பு சட்டத்தை பா.ஜ., மாற்ற விரும்புகிறது. இது அரசியலமைப்பு சட்டத்தை காப்பாற்றுவதற்கான தேர்தல்' காங்கிரஸ் எம்.பி ராகுல் கூறினார்.

மத்திய பிரதேச மாநிலம் ரத்லாம் மாவட்டத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் ராகுல் பேசியதாவது:

மக்கள் நலனுக்காக தற்போதுள்ள 50 சதவீத இடஒதுக்கீடு வரம்பை காங்கிரஸ் அரசு உயர்த்தும். ஜாதிவாரி கணக்கெடுப்பு நாட்டின் அரசியலின் திசையை மாற்றும். மக்கள் உரிமைக்காக நாங்கள் என்ன செய்தாலும், ஆட்சிக்கு வந்ததும் அதை மாற்றி விடுகிறார்கள். ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. இது ஒரு புரட்சிகரமான வேலை. அது இந்திய அரசியலையே மாற்றும். நாங்கள் அதை செய்வோம்.

150 தொகுதிகள் கூட பா.ஜ.,வுக்கு 'நோ'

அரசியலமைப்பு சட்டத்தை பா.ஜ., மாற்ற விரும்புகிறது. இது அரசியலமைப்பு சட்டத்தை காப்பாற்றுவதற்கான தேர்தல். நாங்கள் அதைக் காப்பாற்ற முயற்சிக்கிறோம். பா.ஜ.,வுக்கு 150 தொகுதிகளில் கூட வெற்றி கிடைக்காது. பா.ஜ.,வினர் மக்களின் உரிமைகள் அனைத்தையும் பறிக்க விரும்புகிறார். தலித்துகள், ஆதிவாசிகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஏழைகளுக்குத் தேவையான இடஒதுக்கீட்டை வழங்குவோம். இவ்வாறு ராகுல் பேசினார்.

ராகுல் கண்டனம்

ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரில் நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்த புகாரில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் ராகுல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு என்ற செய்தி 23 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் கனவுகளுக்குச் செய்யும் துரோகம். கடுமையான சட்டங்களை இயற்றுவதன் மூலம் இளைஞர்களை வினாத்தாள் கசிவிலிருந்து விடுவிக்க காங்கிரஸ் தீர்மானித்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் ராகுல் கூறியுள்ளார்.








      Dinamalar
      Follow us