sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இடைத்தேர்தலை குறிவைத்து 30ல் வேலைவாய்ப்பு முகாம்

/

இடைத்தேர்தலை குறிவைத்து 30ல் வேலைவாய்ப்பு முகாம்

இடைத்தேர்தலை குறிவைத்து 30ல் வேலைவாய்ப்பு முகாம்

இடைத்தேர்தலை குறிவைத்து 30ல் வேலைவாய்ப்பு முகாம்


ADDED : ஆக 24, 2024 01:49 AM

Google News

ADDED : ஆக 24, 2024 01:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராம்நகர் : இடைத்தேர்தலில் வெற்றி பெறும் நோக்கத்தில் மக்களை கவர, சென்னபட்டணாவில், வரும் 30ம் தேதி அரசு சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.

ராம்நகரின் சென்னபட்டணா தொகுதிக்கு, இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட துணை முதல்வர் சிவகுமார் முடிவு செய்துள்ளார்.

இந்த தொகுதி ம.ஜ.த., வசம் உள்ளது. இடைத்தேர்தலிலும் வெற்றி பெற்று தொகுதியை தக்கவைக்க வேண்டும் என்பது, மத்திய அமைச்சர் குமாரசாமியின் எண்ணம்.

சென்னபட்டணாவில் வெற்றி பெற இப்போது இருந்தே காங்கிரசும், ம.ஜ.த.,வும் தயாராகி வருகின்றன.

இந்நிலையில், மக்களை கவரும் வகையில் வரும் 30ம் தேதி, சென்னபட்டணாவில் பிரமாண்ட வேலை வாய்ப்பு முகாம் அரசு சார்பில் நடத்தப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை துணை முதல்வர் சிவகுமார் முன்நின்று நடத்துகிறார்.

இம்முகாம் நடத்துவதை ம.ஜ.த., விமர்சித்துள்ளது. 'பெங்களூரு ரூரல் தொகுதி காங்கிரஸ் எம்.பி., ஆக சுரேஷ் இருந்தபோது, ஒரு வேலை வாய்ப்பு முகாம் கூட நடத்தவில்லை.

இப்போது அரசியலுக்காக நாடகம் ஆடுகின்றனர்' என, அக்கட்சியினர் விமர்சித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us