sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

துப்பாக்கிமுனையில் ரூ.50 லட்சம் வழிப்பறி

/

துப்பாக்கிமுனையில் ரூ.50 லட்சம் வழிப்பறி

துப்பாக்கிமுனையில் ரூ.50 லட்சம் வழிப்பறி

துப்பாக்கிமுனையில் ரூ.50 லட்சம் வழிப்பறி


ADDED : ஜூன் 14, 2024 02:11 AM

Google News

ADDED : ஜூன் 14, 2024 02:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாண்டவ்நகர்: பட்டயக் கணக்காளரிடம் வேலை செய்யும் இருவரிடம் துப்பாக்கி முனையில் 50 லட்சம் ரூபாயை நான்கு பேர் கொள்ளையடித்துச் சென்றனர்.

காஜியாபாத்தைச் சேர்ந்த பட்டயக் கணக்காளரிடம் மோகித் சர்மா, அருண் தியாகி ஆகிய இருவரும் வேலை செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் பிற்பகல் மேற்கு டில்லியில் ஒருவரிடம் 50 லட்ச ரூபாயை பெற்றுக் கொண்டு காஜியாபாத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.

கிழக்கு டில்லி, அக்ஷர்தாம் கோவில் அருகே இருவரும் வந்தபோது, இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த நான்கு பேர் வழிமறித்தனர்.

சூழ்நிலையை உணர்ந்த இருவரும் தப்ப முயன்றபோது, மோட்டார் சைக்கிள்களால் இருவரும் மறிக்கப்பட்டனர். நால்வரில் ஒருவர் துப்பாக்கி முனையில் மோகித் சர்மா, அருண் தியாகியை மிரட்டி, தாக்கினார். இருவரும் கீழே விழுந்து கொள்ளையருடன் உருண்டு புரண்டனர்.

அந்த நேரத்தை பயன்படுத்தி மற்ற மூவரும் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். சம்பவத்தை பார்த்த பொதுமக்கள் ஒரு கொள்ளையனை பிடித்து, போலீசில் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us